News October 31, 2025

சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்: அன்புமணி

image

கர்நாடகாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாட்டிலும் அதை நடத்த வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் உள்ள 69% இட ஒதுக்கீட்டை காப்பாற்ற வேண்டுமானால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது அவசியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த கணக்கெடுப்பை நடத்தி, வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டினை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Similar News

News October 31, 2025

₹1000-ல் குழந்தையின் Future-ஐ பாதுகாக்கும் திட்டம்

image

உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை காக்க மாதம் ₹1000-ஐ NPS வாத்சல்யா திட்டத்தில் முதலீடு செய்யலாம். 18 ஆண்டுகள் முதலீடு செய்யும் பட்சத்தில், வட்டி எல்லாம் சேர்த்து மொத்த தொகை ₹8,48,000-ஆக இருக்கும். உங்கள் குழந்தைக்கு 18 வயதான பிறகு 80% தொகையை எடுத்து அவர்களின் படிப்பு செலவுக்கு பயன்படுத்தலாம். <>enps portal<<>>-க்கு சென்று திட்டத்தில் சேருங்கள். எல்லாருக்கும் பயன்படும், SHARE THIS.

News October 31, 2025

இதை சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும்! WARNING

image

Cakes, chips, cookies, crackers, fried foods, margarine & ultra processed உணவுகளை அதிகம் சாப்பிடுவது தான் இந்தியர்களிடையே சர்க்கரை நோய் அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ICMR- MDRF இணைந்து நடத்திய ஆய்வில், இவ்வகை உணவுகளில் நிறைந்திருக்கும் Glycation end products (AGEs) எனப்படும் உட்பொருட்கள், நச்சுத்தன்மையை உண்டாக்கி சர்க்கரை நோய்க்கு வழிவகுப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உஷாரா இருங்க மக்களே!

News October 31, 2025

இனி இந்த 6 வகை நாய்களை வளர்க்க தடை!

image

நாய்களால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், சண்டிகர் மாநகராட்சியில் 6 வகை நாய்களை வளர்க்கவும், வாங்கவும், விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. American bulldog, American Pitbull, Bull Terrier, Rottweiler, Cane Corso, Dogo Argentino போன்ற நாய்கள் உயிருக்கு அச்சுறுத்தலான விலங்கு என பட்டியலிடப்பட்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் இது போன்ற நடவடிக்கை தேவையா?

error: Content is protected !!