News June 26, 2024
சாதிவாரி கணக்கெடுப்பு: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். வளர்ச்சியின் பலன்கள் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும், சென்றடைய வேண்டும். குறிப்பாக, சமூகச் சூழல் என்பது பல்வேறு சமூகங்களின் பொருளாதார முன்னேற்றத்தில் முக்கியப் பங்கு வகிப்பதால், சாதிவாரி கணக்கெடுப்புடன், பத்தாண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News December 10, 2025
சேலத்தில் கோடிக்கணக்கில் பண மோசடி!

சேலம் மாவட்டம் அழகாபுரத்தில் நீலகண்டன் என்பவரது ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாக கிடைக்கும் என சேலத்தை சேர்ந்த சந்திர சேகர் என்பவர் பெங்களூருவை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர்கள் சிலரிடம் ரூ.5 கோடி வரை கடன் பெற்று தலைமறைவு ஆகினர். இந்நிலையில் பணமோசடி செய்த சந்திரேசேகர், நீலகண்டன் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை கோரி பாதிக்கப்பட்டவர்கள் சேலம் கமிஷனரிடம் புகார் அளித்தனர்.
News December 10, 2025
டைரக்டராக களமிறங்குகிறாரா கீர்த்தி சுரேஷ்?

தனக்கு டைரக்ஷனில் ஆர்வம் இருப்பதாகவும், பல கதைகளை எழுதி வருவதாகவும் கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் சொல்லியிருந்தார். இதையொட்டி சில அசோசியேட் இயக்குநர்களை அழைத்து அவர் கதை விவாதம் நடத்த தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், தனுஷ், சிவகார்த்திகேயனுக்கு செட் ஆவதுபோல் ஒரு கதையை அவர் உருவாக்கி வருவதாகவும் பேசப்படுகிறது. கதை முழுமையாக தயாரான உடன் இதுகுறித்த Official தகவல் வெளியாகலாம்.
News December 10, 2025
சற்றுமுன்: மீண்டும் அதிமுகவில் இணைய ஒப்புதல்

அதிமுக செயற்குழு, பொதுக்குழுவில் கூட்டணி, கட்சி ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, EPS தரப்பு நடத்திய பேச்சுவார்த்தையில் கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி.பிரபாகரன் உள்ளிட்டோர் மீண்டும் அதிமுகவில் இணைய ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பிரிந்து சென்ற அதிமுக தலைவர்கள் தவெக, திமுகவுக்கு செல்வதை தடுக்கவே இந்த முடிவாம்.


