News May 7, 2025

94 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பு

image

மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஜாதிவாரி விவரமும் சேகரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டில் முதன்முதலாக முழுமையான ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆங்கிலேய ஆட்சியில் 1931-ல் நடத்தப்பட்டது. அதன் அடிப்படையிலேயே இன்றுவரை இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. 1951-ல் இக்கணக்கெடுப்பு கைவிடப்பட்டது. அதன்பின், 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஜாதி விவரமும் சேகரிக்கப்பட்டாலும், அரசு அதை வெளியிடவில்லை.

Similar News

News December 5, 2025

ஸ்மிருதி மந்தனாவின் நிச்சயதார்த்த மோதிரம் எங்கே?

image

திருமணம் ஒத்திவைக்கப்பட்ட பிறகு ஸ்மிருதி மந்தனா, தனது இன்ஸ்டாவில் போட்ட முதல் பதிவு பேசுபொருளாகியுள்ளது. தனது விளம்பர வீடியோவை பகிர்ந்த அவர், அதில் நிச்சயதார்த்த மோதிரம் அணியாதது பதிவாகியுள்ளது. இதையடுத்து ‘திருமணம் நிறுத்தப்பட்டுவிட்டது உண்மைதானா?’ என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். முன்னதாக, தனது திருமணம் சார்ந்த அனைத்து போட்டோக்களையும் <<18381176>>ஸ்மிருதி<<>> தனது இன்ஸ்டாவில் இருந்து நீக்கியிருந்தார்.

News December 5, 2025

சினிமா பிரபலம் காலமானார்.. கமல் உருக்கமுடன் ஆறுதல்

image

தமிழ் சினிமாவின் ட்ரேட் மார்க் தயாரிப்பாளரான <<18468825>>AVM சரவணன்<<>> பூவுலகை விட்டு மறைந்துவிட்டார். வெளியூர் பயணம் காரணமாக, அவரது இறுதிச் சடங்கில் கமல் பங்கேற்காத நிலையில், உருக்கமுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், இன்று சரவணன் வீட்டிற்கு சென்ற அவர், குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். AVM புரொடக்சன் தயாரிப்பில் சகலகலா வல்லவன் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் கமல் நடித்துள்ளார்.

News December 5, 2025

புடின் முன்னிலையில் PAK-க்கு செய்தி சொன்ன PM மோடி

image

ரஷ்ய அதிபர் புடின் முன்னிலையில், பாகிஸ்தானுக்கு PM மோடி கூர்மையான செய்தியை அனுப்பியுள்ளார். தீவிரவாதத்தை ஒழிப்பதில் இந்தியாவும், ரஷ்யாவும் தோளோடு தோள் நின்று செயல்படுவதாக PM மோடி தெரிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதல் மற்றும் ரஷ்யாவின் குரோகஸ் நகரில் நடந்த தாக்குதலுக்கு தீவிரவாதம் தான் முழு காரணம், அதற்கு எதிராக கூட்டாக செயல்பட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

error: Content is protected !!