News May 7, 2025

94 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பு

image

மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஜாதிவாரி விவரமும் சேகரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டில் முதன்முதலாக முழுமையான ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆங்கிலேய ஆட்சியில் 1931-ல் நடத்தப்பட்டது. அதன் அடிப்படையிலேயே இன்றுவரை இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. 1951-ல் இக்கணக்கெடுப்பு கைவிடப்பட்டது. அதன்பின், 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஜாதி விவரமும் சேகரிக்கப்பட்டாலும், அரசு அதை வெளியிடவில்லை.

Similar News

News November 27, 2025

கம்பீர் நீக்கப்படுகிறாரா? BIG REVEAL..

image

தெ.ஆ., அணியுடனான டெஸ்ட் தொடரில் இந்தியா மோசமாக தோல்வியடைந்ததால் கோச் பதவியில் இருந்து கம்பீர் நீக்கப்படலாம் என பேசப்பட்டது. ஆனால் அதனை பிசிசிஐ தற்போது மறுத்துள்ளது. கம்பீரை நீக்கும் எண்ணம் தற்போது இல்லை எனவும், 2027 WC வரை அவரே கோச்சாக தொடர்வார் எனவும் BCCI விளக்கமளித்துள்ளது. மேலும் அணியை மீண்டும் வலுவாக கட்டமைக்கும் பணியில் கம்பீர் இறங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 27, 2025

இதை கட்ட ₹24 லட்சம் செலவு.. ஊழலில் மலிந்துள்ள நாடு!

image

இந்தியா ஏழை நாடல்ல, ஏழையாக்கப்பட்ட நாடு என்ற கூற்று, இது போன்ற சம்பவங்களின் மூலம் உறுதியாகிறது. மேலே உள்ள போட்டோவை பாருங்க.
ம.பி.யின் ஜுன்னார்தேவ் பகுதியில் கட்டப்பட்டுள்ள சமூகநல கட்டடம் இது. இந்த 15 தூணை கட்ட சுமார் ₹24 லட்சத்தை அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் செலவு செய்துள்ளனர். ஒரு மூட்டை சிமெண்டுக்கு ₹1.92 லட்சம் எனவும் கணக்கு எழுதி வைத்துள்ளனர். மக்களின் வரி பணம், இப்படிதான் வீணாகிறது!

News November 27, 2025

சற்றுமுன்: விலை மொத்தம் ₹9,000 உயர்ந்தது

image

ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்த நிலையில், வெள்ளி விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ₹4 உயர்ந்து ₹180-க்கும், கிலோ வெள்ளி ₹4,000 உயர்ந்து ₹1,80,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, கடந்த மூன்று நாள்களில் மட்டும் வெள்ளி விலை மொத்தம் ₹9,000 அதிகரித்துள்ளது.

error: Content is protected !!