News May 7, 2025

94 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பு

image

மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஜாதிவாரி விவரமும் சேகரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டில் முதன்முதலாக முழுமையான ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆங்கிலேய ஆட்சியில் 1931-ல் நடத்தப்பட்டது. அதன் அடிப்படையிலேயே இன்றுவரை இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. 1951-ல் இக்கணக்கெடுப்பு கைவிடப்பட்டது. அதன்பின், 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஜாதி விவரமும் சேகரிக்கப்பட்டாலும், அரசு அதை வெளியிடவில்லை.

Similar News

News November 27, 2025

CINEMA 360°: காதலை தூண்டும் அனிருத்தின் ‘Pattuma’ பாடல்

image

*கோபிசந்த் மாலினேனி இயக்கும் பாலைய்யாவின் 111-வது படம் பூஜையுடன் தொடங்கியது. *சூர்யாவின் கருப்பு படத்தின் ஓடிடி உரிமம் நெட்பிளிக்ஸுக்கும், சாட்டிலைட் உரிமம் ஜீ5-க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. *அனிருத் குரலில் LIK படத்தின் 2-வது பாடலான ‘Pattuma’ வெளியாகியுள்ளது. *நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள லாக் டவுன் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

News November 27, 2025

அக்னிவீர் பணியிடங்களை அதிகரிக்க முடிவு

image

2026-ம் ஆண்டுக்குள் அக்னிவீர் பணியிடங்களை ஆண்டுக்கு 1 லட்சமாக அதிகரிப்பது குறித்து ராணுவம் பரிசீலித்து வருகிறது. அக்னிபாத் திட்டம் தொடங்கப்பட்டு, 2022 முதல் ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக 40,000 வீரர்கள் பணி அமர்த்தப்படுகின்றனர். அதேவேளையில், ஒவ்வொரு ஆண்டும் ஓய்வு பெறும் வீரர்களின் எண்ணிக்கை 60,000 – 65,000 வரை உள்ளது. இந்த இடைவெளியை குறைக்கும் வகையில், பணியிடங்களை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

News November 27, 2025

BREAKING: டிச.5-ல் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்

image

டிச.5-ம் தேதி (அடுத்த வெள்ளி) அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதில், மாணவர்களின் கல்வித் தரம், பள்ளிகளில் அடிப்படை வசதிகள் உள்ளிட்டவற்றை மேம்படுத்துவது, மாணவர்களுக்கான அரசுத் திட்டங்களை எடுத்துரைப்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளன. ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொள்ளும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம், மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை நடத்தப்படும்.

error: Content is protected !!