News May 7, 2025
94 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பு

மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஜாதிவாரி விவரமும் சேகரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டில் முதன்முதலாக முழுமையான ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆங்கிலேய ஆட்சியில் 1931-ல் நடத்தப்பட்டது. அதன் அடிப்படையிலேயே இன்றுவரை இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. 1951-ல் இக்கணக்கெடுப்பு கைவிடப்பட்டது. அதன்பின், 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஜாதி விவரமும் சேகரிக்கப்பட்டாலும், அரசு அதை வெளியிடவில்லை.
Similar News
News November 17, 2025
இன்று NDA கூட்டணி MLA-க்கள் ஆலோசனை

பிஹாரில் புதிய அமைச்சரவை அமைப்பது தொடர்பாக NDA கூட்டணி MLA-க்கள், இன்று ஆலோசனை நடத்தவுள்ளனர். மீண்டும் CM ஆக நிதிஷ்குமாரே தொடர்வார் என தகவல் வெளியாகியுள்ளது. நவ.22-ல் தற்போதைய அமைச்சரவையின் பதவிக்காலம் முடிவடையவுள்ளதால், இன்று நிதிஷ் தனது ராஜினாமா கடிதத்தை கவர்னரிடம் அளிப்பார். இதன் பிறகு, நவ.22-க்குள் நிதிஷ் CM ஆக பதவியேற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
News November 17, 2025
BREAKING: நடிகர் அஜித் வீட்டில் பதற்றம்

முதல்வர் ஸ்டாலின் வீட்டைத் தொடர்ந்து, நடிகர்கள் அஜித், அரவிந்த்சாமி, லிவிங்ஸ்டன், நடிகை குஷ்பு உள்ளிட்டோர் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. டிஜிபி அலுவலகத்திற்கு இ-மெயில் மூலம் மிரட்டல் வந்ததை அடுத்து, போலீசார் அனைவரின் வீடுகளிலும் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, பாதுகாப்புக்காக அஜித் வீட்டில் போலீஸ் குவிக்கப்பட்டதால், பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
News November 17, 2025
BJP-க்கு விஜய் ஆதரவளித்து விடக்கூடாது: துரை வைகோ

SIR-க்கு எதிராக நேற்று தவெக நடத்திய போராட்டத்தில் விஜய் கலந்துகொள்ளாதது விமர்சனத்திற்கு உள்ளானது. இந்நிலையில், கட்சிப் போராட்டங்களில் விஜய் நேரடியாக கலந்து கொண்டால் தான், அவரது தொண்டர்களுக்கு நம்பிக்கை வரும் என துரை வைகோ தெரிவித்துள்ளார். கொள்கை எதிரியாக தவெக அறிவித்துள்ள பாஜக தமிழகத்தில் நுழைவதற்கு, நேரடியாகவோ மறைமுகமாகவோ விஜய் ஆதரவளித்து விடக்கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.


