News May 7, 2025
94 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பு

மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஜாதிவாரி விவரமும் சேகரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டில் முதன்முதலாக முழுமையான ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆங்கிலேய ஆட்சியில் 1931-ல் நடத்தப்பட்டது. அதன் அடிப்படையிலேயே இன்றுவரை இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. 1951-ல் இக்கணக்கெடுப்பு கைவிடப்பட்டது. அதன்பின், 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஜாதி விவரமும் சேகரிக்கப்பட்டாலும், அரசு அதை வெளியிடவில்லை.
Similar News
News December 10, 2025
8 ஆண்டுகளுக்கு பின் Ring-ல் ஏறும் கிரேட் காளி!

WWE பிரியர்களுக்கு ‘தி கிரேட் காளி’ என்ற பெயரை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. அவர் ஓய்வு பெற்ற 8 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது மீண்டும் Ring-ல் களமிறங்க உள்ளார். ஆனால் இந்த முறை WWE-ல் அல்ல, மாறாக அவரது சொந்த நிறுவனமான CWE-ல்.
2026 ஜனவரி 25-ல் போட்டி நடைபெற உள்ளது. காளி சண்டை போடுவதை பார்க்க யாரெல்லாம் வெயிட்டிங்? கமெண்ட் பண்ணுங்க.
News December 10, 2025
அரசு திட்டங்கள் மூலம் நன்கொடை வசூலித்த பாஜக!

மத்திய அரசு திட்டங்களின் பெயரைச் சொல்லி பாஜக நன்கொடை வசூலித்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ‘ஸ்வச் பாரத்’, ‘பேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ’, ‘கிஷான் சேவா’ உள்ளிட்ட திட்டங்கள் மூலம், கடந்த 2021 டிசம்பர் முதல் 2022 பிப்ரவரி வரை, சொந்த கட்சிக்கு பாஜக நிதி திரட்டியுள்ளது RTI மூலம் தெரியவந்துள்ளது. அரசு திட்டங்கள் மூலம் நன்கொடை வசூலிக்க யாருக்கும் அனுமதி வழங்கவில்லை என்றும் அரசு பதிலளித்துள்ளது.
News December 10, 2025
₹12 லட்சம் சம்பாதித்தால் மட்டுமே மது வாங்க முடியும்!

மதுவிலக்கு அமலில் உள்ள சவுதியில், முதல்முறையாக இஸ்லாமியர் அல்லாத வெளிநாட்டு குடிமக்களுக்கு மது விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், மாதம் ₹12 லட்சம் வருமானம் ஈட்டுபவர்கள் மட்டுமே, தங்கள் வருமான சான்றிதழை காட்டி மது வாங்க முடியும். முன்னதாக, 1952-ல் அந்நாட்டு அரசரின் மகன் குடிபோதையில், பிரிட்டிஷ் தூதரக அதிகாரியை சுட்டுக் கொன்றதால், 73 ஆண்டுகளாக மது தடை செய்யப்பட்டிருந்தது.


