News May 7, 2025
94 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பு

மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஜாதிவாரி விவரமும் சேகரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டில் முதன்முதலாக முழுமையான ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆங்கிலேய ஆட்சியில் 1931-ல் நடத்தப்பட்டது. அதன் அடிப்படையிலேயே இன்றுவரை இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. 1951-ல் இக்கணக்கெடுப்பு கைவிடப்பட்டது. அதன்பின், 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஜாதி விவரமும் சேகரிக்கப்பட்டாலும், அரசு அதை வெளியிடவில்லை.
Similar News
News December 31, 2025
சுவையான பழங்களை தரும் பாலைவனம்

பாலைவனங்கள் பெரும்பாலும் கடுமையான வறண்ட நிலப்பரப்புகளாகவே பார்க்கப்படுகின்றன. ஆனால், அங்கு உயிர்வாழும் தாவரங்களில் இருந்து கிடைக்கும் பழங்கள் மிகவும் சுவையானதாக இருக்கும். சுவையான பாலைவன பழங்கள் என்னென்னவென்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 30, 2025
வங்கதேசத்தில் மேலும் ஒரு இந்து கொலை

வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான வன்முறை அதிகரித்து வரும் நிலையில், மேலும் ஒரு இந்து நபர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆடை தொழிற்சாலையில் காவலாளியாக பணிபுரிந்த பஜேந்திர பிஸ்வாஸை (42), சக காவலாளி நோமன் மியா (29) சுட்டுக் கொன்றார். இருவரும் பேசிக் கொண்டிருந்த போது, கவனக்குறைவால் சுட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2 வாரங்களில் நடந்த 3-வது கொலை இதுவாகும்.
News December 30, 2025
நடிகை நந்தினி மரணம்… அதிர்ச்சித் தகவல்

நடிகை நந்தினியின் மரணத்தில் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. தற்கொலைக்கு முன் அவர் எழுதிய கடிதத்தில், குடும்ப பிரச்னையால் சோக முடிவை எடுப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து போலீஸ் நடத்திய விசாரணையில், நடிப்பை கைவிடுமாறு அவரது தாய் வற்புறுத்தியதாகவும், அதனால் நந்தினி மனமுடைந்து இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. இதனால், துப்பட்டாவில் தூக்கு போட்டு அவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.


