News May 7, 2025
94 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பு

மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஜாதிவாரி விவரமும் சேகரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டில் முதன்முதலாக முழுமையான ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆங்கிலேய ஆட்சியில் 1931-ல் நடத்தப்பட்டது. அதன் அடிப்படையிலேயே இன்றுவரை இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. 1951-ல் இக்கணக்கெடுப்பு கைவிடப்பட்டது. அதன்பின், 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஜாதி விவரமும் சேகரிக்கப்பட்டாலும், அரசு அதை வெளியிடவில்லை.
Similar News
News November 20, 2025
BIG NEWS: தனியாக கட்சி தொடங்கினார்..பெயர் அறிவிப்பு

மதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா திராவிட வெற்றிக் கழகம்(DVK) என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மதிமுகவில் துணைப் பொதுச்செயலாளராக இருந்த மல்லை சத்யா, வைகோவுக்கு அடுத்த நிலையிலிருந்து கட்சியை வழிநடத்தினார். கருப்பு, சிவப்பு வண்ணத்துடன் கூடிய கட்சியின் கொடி அறிமுக விழாவில் நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
News November 20, 2025
ஒரே நாளில் அதிரடியாக ₹3,000 குறைந்தது

வெள்ளி விலை இன்று(நவ.20) கிலோவுக்கு ₹3,000 குறைந்துள்ளது. 1 கிராம் ₹173-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,73,000-க்கும் விற்பனையாகிறது. அமெரிக்கா, சீனா போன்ற முக்கிய நாடுகளுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் காரணமாக இந்தியாவில் வெள்ளி விலை வீழ்ச்சி கண்டுள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். இது சில வாரங்கள் நீடிக்கும் என கணித்துள்ளதால் முதலீட்டாளர்கள் கவனமாக இருப்பது நல்லது.
News November 20, 2025
மெட்ரோ விவகாரத்தில் நடந்தது என்ன? மத்திய அரசு விளக்கம்

கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்காமல் பாஜக அரசியல் செய்வதாக CM ஸ்டாலின் கூறியிருந்தார். இந்நிலையில், TN அரசு பரிந்துரைத்துள்ள 7 மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு போதுமான இடவசதி தெரிவிக்கப்படவில்லை எனவும் அதனால்தான் திருப்பி அனுப்பியதாகவும் மத்திய அமைச்சர் மனோகர்லால் விளக்கமளித்துள்ளார். மேலும், மக்களுக்கான மெட்ரோ திட்டத்தை ஸ்டாலின் தான் அரசியல் ஆக்குகிறார் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.


