News May 7, 2025
94 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பு

மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஜாதிவாரி விவரமும் சேகரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டில் முதன்முதலாக முழுமையான ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆங்கிலேய ஆட்சியில் 1931-ல் நடத்தப்பட்டது. அதன் அடிப்படையிலேயே இன்றுவரை இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. 1951-ல் இக்கணக்கெடுப்பு கைவிடப்பட்டது. அதன்பின், 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஜாதி விவரமும் சேகரிக்கப்பட்டாலும், அரசு அதை வெளியிடவில்லை.
Similar News
News October 16, 2025
BREAKING: தீபாவளி போனஸ்.. அறிவித்தது தமிழக அரசு

டாஸ்மாக் சில்லறை விற்பனை கடை பணியாளர்களுக்கு 20% போனஸ் வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. டாஸ்மாக் C மற்றும் D பிரிவு ஊழியர்களுக்கு இந்த போனஸ் வழங்கப்படுகிறது. 24,816 பணியாளர்களுக்கு ₹40.62 கோடியில் போனஸ் வழங்கப்படுகிறது. ஏற்கெனவே போக்குவரத்து ஊழியர்கள், கூட்டுறவு சங்க ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு தமிழக அரசு போனஸ் அறிவித்திருந்தது.
News October 16, 2025
BC இடஒதுக்கீடு: தெலங்கானா அரசின் மனு தள்ளுபடி

உள்ளாட்சி தேர்தலில் BC இடஒதுக்கீட்டை 42% ஆக உயர்த்தக்கோரிய தெலங்கானா அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்றம் விதித்த தடையை உறுதி செய்த உச்சநீதிமன்றம், தற்போதைய இடஒதுக்கீட்டின் அடிப்படையிலேயே தேர்தல் நடத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. பொதுப் பகுதிகளில் 50% இடஒதுக்கீடு வரம்பை மீற முடியாது என்று SC திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளது.
News October 16, 2025
‘அம்மா SORRY.. நான் சாகப்போறேன்’

‘அம்மா நான் சாகப்போகிறேன். என் மரணத்திற்கு யாரும் காரணமில்லை. என்னை மன்னித்துவிடு’. கேரளாவில் நர்சிங் மாணவி மஹிமா(20) தற்கொலைக்கு முன் எழுதிய வரிகள் இவை. வீட்டில் தூக்கில் தொங்கிய அவரது உடலை மீட்டு ஹாஸ்பிடலுக்கு கொண்டு சென்றபோது, அந்த வாகனம் விபத்தில் சிக்கியது பெரும் சோகம். இதில், காயமடைந்த மஹிமாவின் தாய், சகோதரர் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது.