News May 7, 2025

94 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பு

image

மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஜாதிவாரி விவரமும் சேகரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டில் முதன்முதலாக முழுமையான ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆங்கிலேய ஆட்சியில் 1931-ல் நடத்தப்பட்டது. அதன் அடிப்படையிலேயே இன்றுவரை இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. 1951-ல் இக்கணக்கெடுப்பு கைவிடப்பட்டது. அதன்பின், 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஜாதி விவரமும் சேகரிக்கப்பட்டாலும், அரசு அதை வெளியிடவில்லை.

Similar News

News August 19, 2025

டி.ஆர்.பாலுவின் மனைவி உடலுக்கு ஸ்டாலின் அஞ்சலி

image

சென்னை தி.நகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவியின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், நேரில் அஞ்சலி செலுத்தினார். என் ஆருயிர் நண்பர் டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி பாலு மறைவால் வேதனையடைந்தேன். ஆர்.பாலு மற்றும் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் பொதுவாழ்வில் பயணித்திட அன்பை வழங்கித் துணை நின்ற அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.

News August 19, 2025

ஒருமனதாக தேர்வு செய்யலாம்: PM மோடி அழைப்பு

image

துணை ஜனாதிபதி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணனை ஒருமனதாக தேர்வு செய்ய எதிர்க்கட்சிகளுக்கு PM மோடி அழைப்பு விடுத்துள்ளார். டெல்லியில் இன்று நடந்த NDA கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில், கூட்டணி கட்சிகளுக்கு சி.பி.ஆர்-ஐ வேட்பாளராக மோடி முறைப்படி அறிமுகம் செய்தார். இந்நிலையில், தங்கள் வேட்பாளராக Ex SC நீதிபதி <<17451913>>சுதர்சன் ரெட்டியை<<>> I.N.D.I.A. கூட்டணி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News August 19, 2025

யார் இந்த சுதர்சன் ரெட்டி?

image

INDIA கூட்டணியால் து.ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட 79 வயதான சுதர்ஷன் ரெட்டி தெலங்கானாவின் ரங்காரெட்டியை சேர்ந்தவர். ▶1946-ல் பிறந்த இவர், 2007-2011 வரை உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தார். ▶1971-ல் உஸ்மானியா பல்கலையில் பயின்று, சட்ட ஆலோசகர் ▶1995-ல் ஆந்திர HC-ன் நிரந்தர நீதிபதியாகவும், 2005-ல் குவஹாத்தி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியிருக்கிறார்.

error: Content is protected !!