News May 7, 2025
94 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பு

மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஜாதிவாரி விவரமும் சேகரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டில் முதன்முதலாக முழுமையான ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆங்கிலேய ஆட்சியில் 1931-ல் நடத்தப்பட்டது. அதன் அடிப்படையிலேயே இன்றுவரை இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. 1951-ல் இக்கணக்கெடுப்பு கைவிடப்பட்டது. அதன்பின், 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஜாதி விவரமும் சேகரிக்கப்பட்டாலும், அரசு அதை வெளியிடவில்லை.
Similar News
News November 5, 2025
BREAKING: வந்ததுமே விஜய்க்கு அதிர்ச்சி

தவெக சிறப்பு பொதுக்குழு நடைபெறவுள்ள மாமல்லபுரத்திற்கு காரில் விஜய் வருகை தந்தார். அப்போது, அங்கு வைக்கப்பட்டிருந்த தவெக பேனர்கள், கொடிகளை போலீசார் அகற்றியுள்ளனர். இதை பார்த்து விஜய் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தவெகவுக்கு போலீசார் கடும் நெருக்கடி கொடுப்பதாக அக்கட்சியினர் குற்றம் சாட்டிய நிலையில், அனுமதி பெறாமல், பேனர்கள், கொடிகள் வைக்கப்பட்டதாக போலீசார் கூறுகின்றனர்.
News November 5, 2025
அப்பாவை மிஞ்சிய மகன்!

துருவ் விக்ரம் நடிப்பில் வெளிவந்த ‘பைசன்’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த தீபாவளியன்று வெளியான இப்படம், தற்போது வரை தமிழ்நாட்டில் மட்டும் ₹50 கோடி குவித்துள்ளதாக கூறப்படுகிறது. இது கடைசியாக வெளியான சீயான் விக்ரமின் ‘வீர தீர சூரன்’ படத்தின் தமிழக வசூலை விட அதிகம். ‘வீர தீர சூரன்’ படம் தமிழகத்தில் ₹38- ₹40 கோடி வரை வசூலித்ததாகவே கூறப்படுகிறது. நீங்க ‘பைசன்’ பாத்துட்டீங்களா.. எப்படி இருக்கு?
News November 5, 2025
BREAKING: தங்கம் விலை மளமளவென குறைந்தது

ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் குறைந்ததால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில நாளாக உச்சத்தில் இருந்த ஆபரணத் தங்கம், இன்று சவரனுக்கு ₹560 குறைந்து, ₹89,440-ஆகவும், கிராமுக்கு ₹70 குறைந்து ₹11,180-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ₹800, இன்று ₹560 என 2 நாளில் ₹1360 குறைந்துள்ளது.


