News May 7, 2025

94 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பு

image

மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஜாதிவாரி விவரமும் சேகரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டில் முதன்முதலாக முழுமையான ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆங்கிலேய ஆட்சியில் 1931-ல் நடத்தப்பட்டது. அதன் அடிப்படையிலேயே இன்றுவரை இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. 1951-ல் இக்கணக்கெடுப்பு கைவிடப்பட்டது. அதன்பின், 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஜாதி விவரமும் சேகரிக்கப்பட்டாலும், அரசு அதை வெளியிடவில்லை.

Similar News

News November 27, 2025

LK 7: லாக் செய்த லோகேஷ்

image

‘கூலி’ பட தோல்விக்கு பிறகு, அருண் மாதேஸ்வரனின் ‘DC’ படத்தில் லோகேஷ் கனகராஜ் நடித்து வருகிறார். இந்நிலையில், ‘LK 7′ என்ற ஹேஷ்டேக்குடன் அவரது உதவி இயக்குநர், இன்ஸ்டாவில் ஒரு போட்டோவை பதிவிட்டுள்ளார். இப்போட்டோ வைரலாகவே, ‘கைதி 2’ பட ஷூட்டிங் ஸ்டார்ட் ஆகிடுச்சி என ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனால், இது வேறு படத்திற்கான இயக்குநர் குழுவாக கூட இருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

News November 27, 2025

KAS மனவருத்தத்தில் இருந்தார்: TTV தினகரன்

image

அதிமுகவில் இருந்து நீக்கியதில் இருந்தே செங்கோட்டையன் மனவருத்தத்தில் இருந்ததாக TTV தினகரன் தெரிவித்துள்ளார். அதிமுகவில் செங்கோட்டையனை கொங்கு நாட்டு தங்கம் என்றுதான் சொல்வார்கள் என கூறிய TTV, கட்சியில் பம்பரம்போல் செயல்படுவதாகவும் குறிப்பிட்டார். மேலும், செங்கோட்டையன் விஜய் பக்கம் செல்வது யாருக்கு பின்னடைவு என்பது தமிழக மக்களுக்கு தெரியும் என்றும் EPS-ஐ மறைமுகமாக சாடினார்.

News November 27, 2025

சபரிமலை அன்னதானத்தில் மெனு மாற்றம்

image

நடப்பு மண்டல, மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், கோயிலில் வழங்கப்படும் அன்னதானத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தான தலைமை அறிவித்துள்ளது. இதன்படி, வழக்கமான கஞ்சி, சாதாரண சாப்பாட்டுக்கு பதில், பாயசம், அப்பளத்துடன் உணவு வழங்கப்படும். இது இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

error: Content is protected !!