News October 26, 2025
சாதிவாரி கணக்கெடுப்பு: 15 லட்சம் பேர் புறக்கணிப்பா?

கர்நாடகாவில் கடந்த செப்.22-ல் தொடங்கிய சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு வரும் 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த கணக்கெடுப்பை 15 லட்சம் பேர் புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. Infosys நாராயண மூர்த்தி-சுதா தம்பதியும், இந்த கணக்கெடுப்பை புறக்கணித்த நிலையில், CM சித்தராமையா சாடியிருந்தார். கர்நாடகாவில் மொத்தம் உள்ள 6.80 கோடி பேரில், இதுவரை 6.10 கோடி பேர் தகவல் அளித்துள்ளனர்.
Similar News
News October 26, 2025
பேரிடர் காலத்தில் உங்கள் உயிரை காக்கும் APP

பேரிடர் காலத்தில் உங்கள் உயிரை காக்க TN ALERT செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது TN அரசு. இதில், வெள்ளம், புயல், சுனாமி போன்ற பேரிடர்களுக்கான எச்சரிக்கையை முன்கூடியே வழங்கப்படும். பேராபத்துகளின் போது அதிக ஒலி எச்சரிக்கைகளை எழுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மழை குறித்த அப்டேட்களும் இதில் கிடைக்கும் என்பதால் Playstore-ல் டவுன்லோட் பண்ணிக்கோங்க. பலரது உயிர்காக்கும் இத்தகவலை SHARE பண்ணலாமே.
News October 26, 2025
BJP-ன் SIR கணக்கு TN-ல் தப்பாகும்: CM ஸ்டாலின்

SIR-ஐ வைத்து வாக்காளர் பட்டியலில் உழைக்கும் மக்களின் பெயர்களை நீக்கி வெற்றிபெறலாம் என்ற BJP-யின் கணக்கு, TN-ஐ பொறுத்தவரை தப்பாகத்தான் ஆகும் என்று CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தனது கட்சியை பாஜகவிடம் அடகு வைத்த அதிமுகவுக்கு மக்களின் உரிமைகள் பற்றி கவலைப்பட நேரமில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார். SIR செயல்பாட்டில் திமுகவினர் கண்காணிப்பாக இருந்து செயல்பட வேண்டும் என்று CM அறிவுறுத்தியுள்ளார்.
News October 26, 2025
புயல் அலர்ட்: நாளை இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை

மொன்தா புயல் முன்கூட்டியே இன்று மாலை உருவாகிறது. கனமழை பெய்யும் என்பதால் முதல் மாவட்டமாக புதுவையின் ஏனாமில் அக்.29 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை சென்னை, காஞ்சி, திருவள்ளூர், ராணிப்பேட்டைக்கு மிக கனமழை, விழுப்புரம், செங்கல்பட்டுக்கு கனமழை அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது.


