News April 21, 2025
பள்ளிகளில் ஜாதி சின்னங்கள்.. அரசுத் தடை

பள்ளி வளாகங்களில் மாணவர்களின் ஜாதியை வெளிப்படுத்தும் வகையிலான சின்னங்களை பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. அனைத்து மாவட்ட தலைமைக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஜாதி அடையாளங்களை வைத்து மாணவர்கள் அடிக்கடி மோதுவதாகவும், ஆதலால் ஜாதிய பாடல்களை ஒளிபரப்பவோ, ஜாதியைக் குறிக்கும் வகையிலான ஆடைகளை அணியவோ அனுமதிக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
Similar News
News November 27, 2025
இந்தியாவின் முதல் 7 சீட்டர் SUV EV: சிறப்பம்சங்கள் என்ன?

இந்தியாவில் 7 சீட்களை கொண்ட முதல் SUV EV காரை (XEV 9S) மஹிந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. வேரியண்ட்களுக்கு ஏற்றவாறு 3 வகையான பேட்டரிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த காரின் தொடக்கவிலை ₹19.95 லட்சமாகும் (ex-showroom). பாதுகாப்பிற்காக 7 ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதிக பேட்டரி திறன் கொண்ட வேரியண்ட் 0 -100 kph வேகத்தை 7 விநாடிகளில் அடையும். 20 நிமிடங்களில் 80% சார்ஜ் ஏறும் வசதியும் உள்ளது.
News November 27, 2025
புயல் அலர்ட்.. நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா?

புயல் எதிரொலியாக நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு நாளை(நவ.28) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள <<18406009>>CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.<<>> அதி கனமழையால் ஏற்படும் சிரமங்களை தவிர்க்க நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்குமாறு பெற்றோர், மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். விடுமுறை தொடர்பாக மாவட்ட நிர்வாகம் அறிவிக்க வாய்ப்புள்ளது.
News November 27, 2025
BREAKING: இவர்கள் ஓட்டு போட முடியாது!

வரைவு வாக்காளர் பட்டியலில் யாருடைய பெயர் இடம்பெறாது என்ற தகவலை ECI விளக்கியுள்ளது. டிச.4-ம் தேதிக்குள் SIR படிவத்தை ஒப்படைக்காத நபர்களின் பெயரும், 3 முறை வீட்டுக்கு சென்றும் படிவத்தை வழங்காதவர்களின் பெயரும் பட்டியலில் இடம்பெறாது என தெரிவித்துள்ளது. அவர்கள் டிச.9 முதல் ஜன.8 வரை Form 6 உடன் உறுதிமொழிப் படிவத்தை கொடுத்து புதிதாக விண்ணப்பிக்கலாம். அதையும் தவறவிட்டால் ஓட்டு போட முடியாது.


