News April 21, 2025

பள்ளிகளில் ஜாதி சின்னங்கள்.. அரசுத் தடை

image

பள்ளி வளாகங்களில் மாணவர்களின் ஜாதியை வெளிப்படுத்தும் வகையிலான சின்னங்களை பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. அனைத்து மாவட்ட தலைமைக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஜாதி அடையாளங்களை வைத்து மாணவர்கள் அடிக்கடி மோதுவதாகவும், ஆதலால் ஜாதிய பாடல்களை ஒளிபரப்பவோ, ஜாதியைக் குறிக்கும் வகையிலான ஆடைகளை அணியவோ அனுமதிக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

Similar News

News November 1, 2025

தமிழக மக்களிடம் மோடி மன்னிப்பு கேட்கணும்: SPK

image

பிஹார் மக்கள் துன்புறுத்தப்படுவதாக பொய்யான தகவலை பரப்பிய மோடி, தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என செல்வப்பெருந்தகை (SPK) வலியுறுத்தியுள்ளார். தேர்தல் லாபத்துக்காக தமிழக மக்களை பழித்துக் கூறுவது ஜனநாயகத்துக்கு எதிரானது; தமிழர்கள் உழைப்பும் அறிவும் இணைந்த மக்களாக உலகம் முழுவதும் மரியாதை பெற்றவர்கள்; அப்படி இருக்கையில் தமிழர்கள் மீதான அவதூறு கருத்தை மோடி திரும்ப பெற வேண்டும் என்றார்.

News November 1, 2025

திமுகவிடம் இருந்து தமிழ்நாட்டை மீட்போம்: விஜய்

image

தமிழ்நாடு உருவாக காரணமான எல்லை போராட்ட தியாகிகளையும், ‘தமிழ்நாடு’ என பெயர் சூட்ட காரணமானவர்களின் தியாகங்களையும் நினைவுகூர்வோம் என விஜய் தெரிவித்துள்ளார். மேலும், திமுகவிடம் இருந்து மக்கள் சக்தியின் துணையோடு தமிழ்நாட்டை மீட்போம் எனவும் 2026-ல் உண்மையான மக்களாட்சியை அமைப்போம் என்றும் தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 1956 நவ.1-ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News November 1, 2025

ஆந்திரா, கேரளா, கர்நாடகா பிறந்த தினம் இன்று!

image

மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து பிறமொழி பேசும் பகுதிகள் பிரிந்து சென்ற நாள் இன்று. கேரளா, கர்நாடகா, ஆந்திரா அப்போது சென்னை மாகாணத்தோடு இணைந்தே இருந்தன. மொழிவாரி மாநிலங்கள் கோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. அதன் எதிரொலியாக, 1956-ம் ஆண்டு நவ.1-ம் தேதி முதல் மொழிவாரி மாநிலங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்கள் உருவாயின.

error: Content is protected !!