News March 22, 2024
தனியார் பள்ளிகள் மீது வழக்குப்பதிவு

பிரதமரின் கோவை ரோடுஷோ நிகழ்ச்சிக்கு பள்ளி மாணவர்களை அழைத்து வந்த 3 தனியார் பள்ளிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி பாஜகவின் பிரச்சாரத்திற்காக கோவை வந்திருந்தபோது பள்ளி மாணவர்கள் சிலர் சீருடையில் அணிவகுத்து நின்றனர். அதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், குழந்தைகள் நல சட்டப்பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Similar News
News December 25, 2025
தேங்காய் எண்ணெய் விலை கடும் சரிவு!

வடமாநிலங்களில் நிலவும் உறைபனியால் கோவை, திருப்பூர், குமரி மாவட்டங்களில் இருந்து தேங்காய் எண்ணெய் அனுப்புவது கடும் பாதிப்பை கண்டுள்ளது. இதனால், கடந்த மாதம் ₹5,500 வரை விற்கப்பட்ட 15 லிட்டர் டின் ₹2,000 குறைந்து ₹3,500-க்கு விற்பனையாகிறது. தேங்காய் பவுடர் 1 கிலோ ₹270-ல் இருந்து ₹240 ஆக குறைந்துள்ளது. குறிப்பாக சமையலுக்கு பயன்படுத்தப்படும் தேங்காய் எண்ணெய் விலை லிட்டருக்கு ₹100 வரை குறைந்துள்ளது.
News December 25, 2025
இங்கிலாந்து கோச்சாக ஆகிறாரா ரவி சாஸ்திரி?

ENG அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை நியமிக்க வேண்டும் என Ex வீரர் மாண்டி பனேசர் வலியுறுத்தியுள்ளார். சாம்பியன்ஸ் டிராபி, ஆஷஸ் என தொடர் தோல்விகளால் தடுமாறும் இங்கிலாந்து, Bazball பாணியை கைவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ரவி சாஸ்திரி தலைமையில் இந்தியா இருமுறை ஆஸி.,யில் டெஸ்ட் தொடர் வென்றதை சுட்டிக்காட்டி, அவருக்கு AUS அணியை வீழ்த்தும் தந்திரம் தெரியும் எனவும் பனேசர் கூறியுள்ளார்.
News December 25, 2025
BREAKING: 10 லட்சம் வாக்காளர்களுக்கு சிக்கல்

SIR படிவத்தை முறையாக பூர்த்தி செய்யாத 10 லட்சம் வாக்காளர்களுக்கு அஞ்சல் மூலம் நோட்டீஸ் அனுப்ப ECI முடிவெடுத்துள்ளது. நோட்டீஸ் பெறுபவர்கள், நிரந்தர குடியிருப்பு உள்ளிட்ட 13 சான்றிதழ்களை ஆவணமாக சமர்பிக்கலாம். இதற்கு ஏதுவாக ஜன.25 வரை கட்டணமின்றி சான்றிதழ்கள் வழங்க வருவாய் துறை உத்தரவிட்டுள்ளது. உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கும் தகுதியான வாக்காளர் பெயர் மீண்டும் லிஸ்ட்டில் சேர்க்கப்படும் என கூறப்படுகிறது.


