News December 14, 2024
இசைவாணி புகாரில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

பாடகி இசைவாணி குறித்து அவதூறு பரப்பிய புகாரில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தன்னைப் பற்றி சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பப்படுவதாக சென்னை வடக்கு கடற்கரை காவல்நிலையத்தில் அவர் புகார் அளித்திருந்தார். வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். ‘I am sorry Iyyappa..’ என்ற அவரது பாடல் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 7, 2026
FLASH: மாருதி சுசுகி கார்களின் விலை ₹45,000 வரை குறைந்தது

கார் வாங்க காத்திருப்போருக்கு மாருதி சுசுகி நிறுவனம் அதிரடி ஆஃபர்களை வாரி வழங்கியுள்ளது. மாருதி சுசுகி ஸ்விஃப்ட் முதல் ஆல்டோ கே10 வரை பிரபலமான கார்களுக்கு ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த சலுகையானது மார்ச் 31-ம் தேதி வரை மட்டுமே இருக்கும் என மாருதி சுசுகி தெரிவித்துள்ளது. எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைவு என்பதை மேலே போட்டோக்களாக கொடுத்துள்ளோம். வலப்பக்கம் SWIPE செய்து பாருங்க.
News March 7, 2026
Sports 360°: சஞ்சு சாம்சனுக்கு இந்த விருது கிடைக்குமா?

➤T20 WC Finals-ல் நாளை நியூசியை எதிர்கொள்கிறது இந்தியா ➤T20 WC அரையிறுதியில் அபாரமாக விளையாடிய சஞ்சு சாம்சன், Player of the Tournament விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார் ➤La Liga கால்பந்து தொடரில் செல்டா விகோ அணிக்கு எதிரான போட்டியில், ரியல் மாட்ரிட் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது ➤பிராக் மாஸ்டர்ஸ் தொடரில் வெற்றி பெற்ற குகேஷ் FIDE தரவரிசையில் Top 10-ல் இடம்பிடித்துள்ளார்.
News March 7, 2026
எடப்பாடியாரே எச்சரிக்கையாக இருங்க: திருமாவளவன்

பிஹாரில் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட நிலை தமிழ்நாட்டிலும் ஏற்படும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். EPS முதலமைச்சராக வந்தால், அவரால் அந்த பதவியில் அமர முடியுமா என்றும், நிதிஷ்குமாரின் கதி EPS-க்கு நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். எடப்பாடியாரே எச்சரிக்கையாக இருங்கள்; MGR, ஜெ., கட்டிக் காத்த அதிமுகவை காப்பாற்றுங்கள் எனவும் கூறியுள்ளார்.


