News September 29, 2024

WhatsApp மீது வழக்குப்பதிவு

image

வழக்கு விசாரணையின் போது தேவையான தகவல்களை தர மறுத்ததால் WhatsApp இயக்குநர்கள், மண்டல அதிகாரிகள் மீது ஹரியானா போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பல முறை கேட்டும் தகவல்களை தர மறுத்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் சட்டவிதிகளை மீறி, குற்றவாளிக்கு ஆதரவாக வாட்ஸ்அப் நிறுவனம் செயல்படுவதாக போலீசார் தங்களது அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளனர்.

Similar News

News August 24, 2025

நகை கடன்.. முக்கிய அறிவிப்பு

image

நகை மதிப்பில் 90% வரை கடன் வழங்கும் திட்டத்தை சவுத் இந்தியன் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. குறைந்த வட்டி விகிதம், நெகிழ்வான திருப்பி செலுத்தும் விருப்பத் தேர்வுகளுடன் கடன் வழங்கப்படும் என வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்மூலம், ₹1 லட்சம் மதிப்புள்ள நகைகளுக்கு ₹90 ஆயிரம் வரை கடன் பெற முடியும். பொதுத்துறை வங்கிகள் 60 – 70% வரையும், நிதி நிறுவனங்கள் 75% வரையும் நகை கடன் வழங்குகின்றன. SHARE IT

News August 24, 2025

சங்கர் ஜிவாலுக்கு புதிய பொறுப்பு?

image

தமிழக டிஜிபியாக உள்ள சங்கர் ஜிவால், ஆக.29 உடன் ஓய்வு பெறுவதற்கான கோப்பில் CM ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், புதிதாக அமைக்கப்படவுள்ள தீயணைப்பு ஆணையத்தின் தலைவராக 2 ஆண்டுகளுக்கு அவரை நியமிக்கவுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் அடுத்த டிஜிபி பரிந்துரையில் சீமா அகர்வால், ராஜீவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் உள்ளனராம்.

News August 24, 2025

JUSTIN: ககன்யான் திட்டத்தின் பாராசூட் சோதனை வெற்றி

image

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் பாராசூட் சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டதாக இஸ்ரோ(ISRO) தெரிவித்துள்ளது. இந்திய விமானப்படை, கடற்படையுடன் இணைந்து இந்த சோதனை நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்வெளியில் இருந்து விண்கலம் பூமிக்குத் திரும்பும்போது அதன் வேகத்தைக் குறைக்கும் வகையில் இந்த பாராசூட் உருவாக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!