News September 28, 2025
தவெக மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு

கரூரில் விஜய்யின் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்த துயரம் நாட்டையே உலுக்கியுள்ளது. இதனிடையே இதுதொடர்பாக தவெகவின் கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 10,000 பேரே கூடுவார்கள் என தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், 500 காவலர்கள் மட்டுமே பாதுகாப்பு பணிக்கு அனுப்பியதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 19, 2026
மகளிர் உரிமைத்தொகை ₹2,000.. CM ஸ்டாலின் அறிவிக்கிறார்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை (KMUT) ₹2,000 ஆக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை வரும் பேரவை கூட்டத்தொடரில் CM ஸ்டாலின் அறிவிக்கவிருந்தார். அதனை அறிந்து கொண்ட அதிமுக ரேஸில் முந்திக்கொண்டு தனது தேர்தல் அறிக்கையில் <<18879658>>’குல விளக்கு’ திட்டமாக<<>> அறிவித்துள்ளதாம். ஏற்கெனவே மகளிர் உரிமைத்தொகை உயர்த்தி வழங்கப்படும் என CM ஸ்டாலின் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
News January 19, 2026
விஜய்யை மறைமுக அட்டாக் செய்த KP முனுசாமி

எம்ஜிஆர் படத்திலும், பொதுவாழ்விலும் நேர்மையானவர். ஆனால் இப்போ அரசியல் வரும் நடிகர்கள் அப்படி இருக்கிறார்களா என அதிமுகவின் கே.பி.முனுசாமி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், எம்ஜிஆர் மக்களுக்கு நல்ல அறிவுரை கூறும் கேரக்டரில் நடித்தவர் என்றும், ஆனால் இப்போதுள்ள நடிகர்கள் மது குடித்து, 4 பெண்களுடன் நடனம் ஆடுவதுபோல் நடிக்கின்றனர். அவர்கள் அரசியலுக்கு வந்து என்ன செய்ய போகிறார்கள் எனவும் விமர்சித்துள்ளார்.
News January 19, 2026
3 மாடி வீடு, கார், 3 ஆட்டோ.. பிச்சைக்காரரின் சொத்து!

Beggar free இந்தூரை உருவாக்கும் முயற்சியில் இருக்கும் அதிகாரிகளை மங்கிலால் என்ற பிச்சைக்காரர் அதிர வைத்துள்ளார். அவருக்கு சொந்தமாக 3 மாடி வீடு & PMAY திட்டத்தின் கீழ் ஒரு 1 BHK ஃபிளாட், 3 ஆட்டோக்கள், டிரைவருடன் ஒரு Swift காரும் உள்ளதாம். ஆட்டோக்களை வாடகைக்கு விடுவதுடன், பணத்தை வட்டிக்கு கொடுத்தும் அவர் சம்பாதிக்கிறாராம். அதிகாரிகள் அவரின் முழு சொத்து விவரம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


