News January 31, 2025

சீமான் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

image

ஈரோட்டில் பிரசாரத்தின் போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சீமான் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வெங்காயத்தை வீசினால் வெடிகுண்டை வீசுவேன் என சீமான் பேசியிருந்தார். இது குறித்து திமுகவைச் சேர்ந்த ரத்தினசாமி என்பவர் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து, கலவரத்தை தூண்டுதல், மக்களை அச்சுறுத்தும் வகையில் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதியப்பட்டுள்ளது.

Similar News

News March 4, 2026

ஈரானின் உயர் தலைவரே டார்கெட்: இஸ்ரேல் எச்சரிக்கை

image

ஈரானின் உயர் தலைவராக யார் வந்தாலும் அவரை காலி செய்வதுதான் எங்களது இலக்கு என இஸ்ரேலின் பாதுகாப்புத்துறை அமைச்சர் காட்ஸ் எச்சரித்துள்ளார். இந்த பணியை முடிக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என இஸ்ரேல் படைக்கு நெதன்யாகு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஈரானின் உயர் தலைவராக கமேனியின் மகன் முஜ்தபா கமேனி பதவியேற்றுள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News March 4, 2026

திருச்சி ரயில்வேயில் இந்தி பெயரை அகற்ற ஒப்புதல்

image

திருச்சி ரயில்வே நுழைவாயிலில் இந்தி பெயர் இடம்பெற்றதற்கு <<19295250>>CM ஸ்டாலின்<<>> உள்பட பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் திருச்சி ரயில்வே அலுவலகம் முன் திமுகவினர் போராட்டமும் நடத்தினர். இந்த விவகாரம் பெரும் பூதாகரமான நிலையில், இந்தி பெயரை அகற்ற அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர். கல்வெட்டில் உள்ள இந்தி பெயர் உடனடியாக மாற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

News March 4, 2026

ரேஷன் கார்டுதாரர்களுக்கு.. விஜய் வாக்குறுதி

image

ரேஷன் அட்டைதாரர்களுக்கான வாக்குறுதிகளை விஜய் அளித்துள்ளார். இதன்படி, 500 ரேஷன் கார்டுக்கு ஒரு ரேஷன் கடை, ரேஷன் கடைகளில் அரிசி தவிர மற்ற பொருட்கள் அனைத்தும் பாக்கெட் செய்து வழங்கப்படும். மேலும், ரேஷன் கடைகளில் பெண்களுக்கு பெண் எடையாளர், ஆண்களுக்கு ஆண் எடையாளர் என நியமிக்கப்படுவார்கள் என்றும் அவர் அறிவித்துள்ளார். ரேஷன் அட்டைதாரர்களை இலக்காக கொண்ட இந்த வாக்குறுதி பற்றி உங்கள் கருத்து என்ன?

error: Content is protected !!