News April 15, 2025

ஓயோ நிறுவனர் மீது வழக்குப்பதிவு

image

ஜெய்ப்பூரில் மோசடி புகாரின் அடிப்படையில் ஓயோ உரிமையாளர் ரிதேஷ் அகர்வால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓயோ தளத்தில் வெளியிடப்பட்ட தவறான தகவலால் தங்களுக்கு 2.66 கோடிக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ் வந்துள்ளதாக சம்ஸ்காரா என்ற விடுதியின் உரிமையாளர் புகாரளித்துள்ளார். தங்கள் விடுதியின் மூலம் அதிகமான புக்கிங் நடைபெற்றதாக ஓயோ மோசடி செய்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

Similar News

News January 5, 2026

தங்கம் விலை தாறுமாறாக மாறியது

image

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்றும் கடுமையாக உயர்ந்துள்ளது. 1 அவுன்ஸ்(28g) தங்கம் $72 அதிகரித்து $4,391.58-க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருவதால் சாமானிய மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். வெள்ளி விலையும் அவுன்ஸ் $3.51 அதிகரித்துள்ளது. இதனால், இன்று இந்திய சந்தையிலும் தங்கம் விலையில் (சவரன் ₹1,00,800) பெரும் மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

News January 5, 2026

பழைய சோறு உணவல்ல, அமிர்தம்!

image

காலையில் தினமும் இட்லி, தோசை என சாப்பிடுவதை விட பழைய சோறை சாப்பிடுவது, உடலுக்கு மிக நல்லது என்கின்றனர் டாக்டர்கள். இது, *நோய்த்தொற்றுகளை தடுக்க உதவும் *இளமையை தக்கவைக்க உதவும் *நன்மை தரும் பாக்டீரியாக்கள் இதில் அதிகம் *வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும் *உடல் சூட்டை போக்கும் *வயிற்றுப்புண்களுக்கு ஆற்ற உதவும் *மலச்சிக்கலை நீக்கும் *உடல் சோர்வை விரட்டும் *ரத்த அழுத்தம் சீராகும்.

News January 5, 2026

அரசு ஊழியர்களை ஸ்டாலின் தந்திரமாக ஏமாற்றியுள்ளார்: EPS

image

தேர்தலில் அறிக்கையில் பழைய ஒய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என கூறி திமுக, அரசு ஊழியர்களை ஏமாற்றிவிட்டதாக EPS குற்றம்சாட்டியுள்ளார். அவர்கள் கேட்ட பழைய ஓய்வூதிய திட்டத்தை வழங்காமல், புதிய திட்டத்தால் ஊழியர்களை ஏமாற்றுவதாகவும் சாடியுள்ளார். வேலை நிறுத்தத்தை தந்திரமாக ஸ்டாலின் நிறுத்தியதாகவும், அரசாணை வெளியிடும்போது திமுகவை பற்றி அரசு ஊழியர்கள் தெரிந்துகொள்வார்கள் எனவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!