News April 15, 2025

ஓயோ நிறுவனர் மீது வழக்குப்பதிவு

image

ஜெய்ப்பூரில் மோசடி புகாரின் அடிப்படையில் ஓயோ உரிமையாளர் ரிதேஷ் அகர்வால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓயோ தளத்தில் வெளியிடப்பட்ட தவறான தகவலால் தங்களுக்கு 2.66 கோடிக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ் வந்துள்ளதாக சம்ஸ்காரா என்ற விடுதியின் உரிமையாளர் புகாரளித்துள்ளார். தங்கள் விடுதியின் மூலம் அதிகமான புக்கிங் நடைபெற்றதாக ஓயோ மோசடி செய்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

Similar News

News October 29, 2025

மோடிஜி பயப்படாதீர்கள்: ராகுல்

image

ஒவ்வொரு நாட்டிற்கு டிரம்ப் செல்லும் போதும், PM மோடியை அவமதிக்கிறார்; சமீபத்தில் தென் கொரியாவில் அவமதித்துள்ளார் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். வர்த்தகத்தை காரணம் காட்டி ஆபரேஷன் சிந்தூரை நிறுத்தியதாகவும், 7 போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டதாகவும் டிரம்ப் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார். மேலும், மோடிஜி பயப்படாதீர்கள்; தைரியத்தை வரவழைத்து டிரம்ப்புக்கு பதிலடி கொடுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

News October 29, 2025

Sports Roundup: ஸ்குவாஷில் கலக்கும் அனாஹத் சிங்

image

*இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ODI-ல் நியூசிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி. *கனடா ஓபன் ஸ்குவாஷ் காலிறுதியில், இந்தியாவின் அனாஹத் சிங் உலகின் 7-ம் நிலை வீராங்கனை டினே கிலிஸை நேர் செட்களில் வீழ்த்தினார். *ஜெர்மனியில் நடக்கும் ஹைலோ ஓபன் பேட்மிண்டனில் லக்‌ஷயா சென் முதல் சுற்றில் வெற்றி. *காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 3 டி20 போட்டிகளில் இருந்து நிதிஷ் ரெட்டி விலகல்.

News October 29, 2025

நாளை பள்ளிகளுக்கு இங்கு விடுமுறை

image

தேவர் குருபூஜையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார் கோவில், திருப்பத்தூர், இளையான்குடி, தேவக்கோட்டை ஆகிய 7 ஒன்றியங்களில் பள்ளிகளுக்கு நாளை(அக்.30) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ராஜராஜ சோழனின் சதய விழா கொண்டாட்டத்தையொட்டி, தஞ்சை மாவட்டத்தில் நவ.1-ம் தேதி பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் இயங்காது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. SHARE IT.

error: Content is protected !!