News April 15, 2025
ஓயோ நிறுவனர் மீது வழக்குப்பதிவு

ஜெய்ப்பூரில் மோசடி புகாரின் அடிப்படையில் ஓயோ உரிமையாளர் ரிதேஷ் அகர்வால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓயோ தளத்தில் வெளியிடப்பட்ட தவறான தகவலால் தங்களுக்கு 2.66 கோடிக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ் வந்துள்ளதாக சம்ஸ்காரா என்ற விடுதியின் உரிமையாளர் புகாரளித்துள்ளார். தங்கள் விடுதியின் மூலம் அதிகமான புக்கிங் நடைபெற்றதாக ஓயோ மோசடி செய்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News December 4, 2025
20 மாவட்டங்களில் பேய் மழை பொளந்து கட்டும்

சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கை, விழுப்புரம் மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கடலூர், ராணிப்பேட்டை, தி.மலை, சேலம், குமரி, தேனி, நெல்லை உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு மழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை கனமழை பெய்யும் என IMD கணித்துள்ளது. எனவே, அவசியமின்றி வெளியே செல்வதை தவிருங்கள்.
News December 4, 2025
சனாதன தர்மத்தை பரப்ப வேண்டும்: பாலய்யா

பாலய்யா நடித்து வரும் 5-ம் தேதி ரிலீஸ் ஆக உள்ள ‘அகண்டா 2’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அதில் பங்கேற்று அவர் பேசும்போது, சனாதன தர்மம் பற்றி அடுத்த தலைமுறையினருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகவே இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், தர்மத்திற்கு ஆதரவாக, அநீதிகளுக்கு எதிராக செயல்படுவதே சனாதன தர்மம் எனவும் அதை இளைஞர்களுக்கு இந்த படம் கற்று கொடுக்கும் என்றும் தெரிவித்தார்.
News December 4, 2025
ராசி பலன்கள் (04.12.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.


