News April 15, 2025

ஓயோ நிறுவனர் மீது வழக்குப்பதிவு

image

ஜெய்ப்பூரில் மோசடி புகாரின் அடிப்படையில் ஓயோ உரிமையாளர் ரிதேஷ் அகர்வால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓயோ தளத்தில் வெளியிடப்பட்ட தவறான தகவலால் தங்களுக்கு 2.66 கோடிக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ் வந்துள்ளதாக சம்ஸ்காரா என்ற விடுதியின் உரிமையாளர் புகாரளித்துள்ளார். தங்கள் விடுதியின் மூலம் அதிகமான புக்கிங் நடைபெற்றதாக ஓயோ மோசடி செய்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

Similar News

News December 1, 2025

BREAKING: கேஸ் சிலிண்டர் விலை குறைந்தது

image

சர்வதேச எண்ணெய் சந்தை நிலவரப்படி, மாத தொடக்க நாளான இன்று (டிச.1) கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ₹10.50 குறைந்துள்ளது. இதனால் சென்னையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் ₹1,739.50-க்கு விற்கப்படுகிறது. அதேநேரம், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லாமல் ₹868.50-க்கே விற்பனை செய்யப்படுகிறது.

News December 1, 2025

அதிமுக எங்களை ஏமாற்றவில்லை: பிரேமலதா

image

ராஜ்யசபா MP விவகாரத்தில் அதிமுக தேமுதிகவை ஏமாற்றவில்லை என பிரேமலதா கூறியுள்ளார். அதிமுகவிடம் MP பதவியை 2025-ல் கேட்டதாக கூறிய அவர், அதிமுகவில் இருந்து 2026-ல் தருவதாக உறுதியளித்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், MP சீட் விவகாரத்தை அதிமுக ஏமாற்றிவிட்டதாக பேசி வந்த இவர், இப்படி அந்தர் பல்டி அடித்திருப்பது கூட்டணி கணக்குக்கு தானா என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

News December 1, 2025

டிரம்ப் – மதுரோ போன் கால்: நீடிக்கும் பதற்றம்

image

வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவுடன், தொலைபேசியில் பேசியதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். உரையாடலின் முழு விவரங்களை வெளியிட மறுத்த டிரம்ப் ‘பேச்சுவார்த்தை நன்றாக நடந்தது என சொல்ல மாட்டேன். அதேநேரம் மோசமாகவும் நடக்கவில்லை. அது ஒரு வெறும் தொலைபேசி அழைப்பு’ என்று மட்டும் கூறியுள்ளார். இதனால் இருநாடுகள் இடையே <<18429070>>போர் பதற்றம்<<>> தொடர்ந்து நீடித்தே வருகிறது.

error: Content is protected !!