News April 15, 2025
ஓயோ நிறுவனர் மீது வழக்குப்பதிவு

ஜெய்ப்பூரில் மோசடி புகாரின் அடிப்படையில் ஓயோ உரிமையாளர் ரிதேஷ் அகர்வால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓயோ தளத்தில் வெளியிடப்பட்ட தவறான தகவலால் தங்களுக்கு 2.66 கோடிக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ் வந்துள்ளதாக சம்ஸ்காரா என்ற விடுதியின் உரிமையாளர் புகாரளித்துள்ளார். தங்கள் விடுதியின் மூலம் அதிகமான புக்கிங் நடைபெற்றதாக ஓயோ மோசடி செய்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News December 10, 2025
டைரக்டராக களமிறங்குகிறாரா கீர்த்தி சுரேஷ்?

தனக்கு டைரக்ஷனில் ஆர்வம் இருப்பதாகவும், பல கதைகளை எழுதி வருவதாகவும் கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் சொல்லியிருந்தார். இதையொட்டி சில அசோசியேட் இயக்குநர்களை அழைத்து அவர் கதை விவாதம் நடத்த தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், தனுஷ், சிவகார்த்திகேயனுக்கு செட் ஆவதுபோல் ஒரு கதையை அவர் உருவாக்கி வருவதாகவும் பேசப்படுகிறது. கதை முழுமையாக தயாரான உடன் இதுகுறித்த Official தகவல் வெளியாகலாம்.
News December 10, 2025
சற்றுமுன்: மீண்டும் அதிமுகவில் இணைய ஒப்புதல்

அதிமுக செயற்குழு, பொதுக்குழுவில் கூட்டணி, கட்சி ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, EPS தரப்பு நடத்திய பேச்சுவார்த்தையில் கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி.பிரபாகரன் உள்ளிட்டோர் மீண்டும் அதிமுகவில் இணைய ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பிரிந்து சென்ற அதிமுக தலைவர்கள் தவெக, திமுகவுக்கு செல்வதை தடுக்கவே இந்த முடிவாம்.
News December 10, 2025
ஸ்கூல் பசங்களுக்கான இந்த சட்டம் நடைமுறையில் உள்ளதா?

ஸ்கூலுக்கு செல்வதற்குள் பையின் வெயிட்டால் மாணவர்கள் முதுகு வலிக்கு ஆளாகின்றனர். இதற்கு தீர்வாக, மாணவர்களின் உடல் எடையில் 10% மட்டுமே பையில் சுமந்து செல்ல வேண்டும் என்ற சட்டம் 2020-ல் கொண்டுவரப்பட்டது. எந்த வகுப்பு மாணவர் எவ்வளவு வெயிட்டை பையில் எடுத்து செல்ல வேண்டும் என்பதை அடுத்த படத்தில் கொடுத்துள்ளோம். ஆனால், இது வெறும் சட்டமாக மட்டுமே இருப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. நீங்க என்ன சொல்றீங்க?


