News July 1, 2024

எம்.ஆர் விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு

image

நில அபகரிப்பு செய்ததாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது 6 பிரிவுகளின் கீழ் கரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொலை மிரட்டல், போலி ஆவணங்களை கொடுத்து நில அபகரிப்பு செய்ததாக நிலத்தின் உரிமையாளர் பிரகாஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில், அவர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது பயம் காரணமாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவான நிலையில், அவரை தனிப்படைகள் தேடிவருகின்றன.

Similar News

News November 18, 2025

அதிமுகவையும் திமுகதான் காப்பாற்றணும்: மருது அழகுராஜ்

image

எம்ஜிஆர் உருவாக்கிய, ஜெயலலிதா வளர்த்த அதிமுக இப்போது இல்லை என மருது அழகுராஜ் கூறியுள்ளார். இப்போதிருக்கும் அதிமுக சில சமூகங்கள் சேர்ந்த சாதி அமைப்பாக மாறிவிட்டது என்ற அவர், சகோதர இயக்கமான அதிமுகவையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு திமுகவுக்கு வந்திருக்கிறது என தெரிவித்துள்ளார். இதனால்தான் அதிமுகவை விட்டு வந்துவிட்டோமே என்ற வருத்தம் தனக்கு துளியும் இல்லை என அவர் விளக்கமளித்துள்ளார்.

News November 18, 2025

அதிமுகவையும் திமுகதான் காப்பாற்றணும்: மருது அழகுராஜ்

image

எம்ஜிஆர் உருவாக்கிய, ஜெயலலிதா வளர்த்த அதிமுக இப்போது இல்லை என மருது அழகுராஜ் கூறியுள்ளார். இப்போதிருக்கும் அதிமுக சில சமூகங்கள் சேர்ந்த சாதி அமைப்பாக மாறிவிட்டது என்ற அவர், சகோதர இயக்கமான அதிமுகவையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு திமுகவுக்கு வந்திருக்கிறது என தெரிவித்துள்ளார். இதனால்தான் அதிமுகவை விட்டு வந்துவிட்டோமே என்ற வருத்தம் தனக்கு துளியும் இல்லை என அவர் விளக்கமளித்துள்ளார்.

News November 18, 2025

தினேஷ் கார்த்திக் வீட்டின் அருகே ஆண் சடலம்

image

சென்னையில் உள்ள கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கின் வீட்டின் அருகே முகத்தில் செலோடேப் சுற்றியபடி இளைஞர் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சடலத்தின் அருகில் கிடந்த பையில் இருந்த ஆவணங்களின் மூலம் இறந்து கிடந்தவர் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த கலையரசன் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!