News April 28, 2024
மாயாவதியின் மருமகன் மீது வழக்குப்பதிவு

பாஜகவையும், தலிபான்களையும் ஒப்பிட்டு சர்ச்சையாக பேசியதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியின் மருமகன் ஆகாஷ் ஆனந்த் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். உ.பியில் புல்டோசர்களின் அரசாங்கம் நடப்பதாக குற்றம் சாட்டிய அவர், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்துவதை யோகி செய்வதாக குற்றம் சாட்டினார். பகுஜன் சமாஜ் கட்சி உ.பி-யில் எந்தக் கூட்டணியிலும் கூட்டணியில் இணையாமல் தனித்துத் தேர்தலை சந்திக்கிறது.
Similar News
News August 14, 2025
சில மணி நேரத்தில் ஆன்லைனில் கசிந்தது ‘கூலி’

ரஜினி நடிப்பில் இன்று வெளியாகி தியேட்டர்களை திருவிழாக் கோலமாக மாற்றியுள்ள கூலி திரைப்படம், சில மணிநேரங்களிலேயே ஆன்லைனில் கசிந்துள்ளது. படத்தின் HD PRINT தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட டோரண்ட் இணையதளங்களில் இலவசமாக டவுன்லோடு செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தை ஆன்லைனில் வெளியிட 36 இணையதளங்களுக்கு ஐகோர்ட் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
News August 14, 2025
இடி, மின்னலுடன் மழை வெளுக்கும்: IMD

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றுள்ள நிலையில், தமிழகத்தில் ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இரவு 7 மணி வரை ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம், தருமபுரி, தி.மலை, புதுக்கோட்டை, தஞ்சை, தென்காசி, கோவை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. அதனால், வெளியே செல்பவர்கள் கவனமாக இருங்க!
News August 14, 2025
தூய்மை பணியாளர்களுக்கான 6 அறிவிப்புகள்

*தூய்மை பணியாளர்களுக்கு நோய்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க தனித் திட்டம். *பணியின் போது இறக்க நேரிட்டால், குடும்பத்தினருக்கு ₹10 லட்சம். *சுய தொழில் தொடங்குவோருக்கு ₹3.50 லட்சம் மானியம். கடனை தவறாமல் செலுத்தினால் 6% வட்டி மானியம். *குழந்தைகள் எந்த பள்ளியில் படித்தாலும், அனைத்து கட்டணங்களும் வழங்கும் வகையில் ‘புதிய உயர் கல்வி உதவித் தொகை திட்டம்’. *வசிப்பிடத்திலேயே சொந்த வீடு. *இலவச காலை உணவு.