News May 23, 2024

லாலு பிரசாத் மகள் மீது வழக்குப்பதிவு

image

பிஹாரின் சரண் தொகுதியில் 5ஆவது கட்ட வாக்குப்பதிவின் போது, பாஜக மற்றும் ஆர்ஜேடி தொண்டர்கள் மத்தியில் மோதல் வெடித்தது. இதில், ஒருவர் உயிரிழந்த நிலையில், இருவர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில், அத்தொகுதியின் ஆர்ஜேடி வேட்பாளரும், லாலு பிரசாத்தின் மகளுமான ரோகினி ஆச்சார்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் வாக்குச்சாவடிக்கு சென்றபோது, இரு தரப்பும் மோதிக் கொண்டதாக கூறப்படுகிறது.

Similar News

News November 21, 2025

அழுகிய மனைவி உடல்.. கொடூர கணவன் சிக்கினான்

image

குஜராத், பவ்நகரில் நடந்துள்ள கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வனத்துறை அதிகாரியான கம்பலா, சக பெண் அலுவலருடன் உறவில் இருந்துள்ளார். இந்நிலையில் ஊரிலிருந்து வீட்டுக்கு வந்த அவரது மனைவி, மகள்(13), மகன்(9) திடீரென காணாமல் போயுள்ளனர். போலீஸின் தீவிர விசாரணையில் கம்பலா வீட்டருகிலேயே 3 பேரின் அழுகிய உடல்கள் கிடைத்துள்ளன. அவர்களை கொலை செய்ததாக கம்பலா கைது செய்யப்பட்டுள்ளார்.

News November 21, 2025

வங்கி கணக்கில் ₹2,000.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

image

பெற்றோரை இழந்த பள்ளி மாணவர்களுக்கு மாதந்தோறும் ₹2,000 வழங்கும் அன்பு கரங்கள் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் பணிகள் மாவட்ட வாரியாக தொடங்கியுள்ளன. தகுதியுள்ள மாணவர்கள், ரேஷன் அட்டை நகல், ஆதார் நகல், வயது சான்று நகல், வங்கி பாஸ்புக் உள்ளிட்ட ஆவணங்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். தகுதியானவர்களுக்கு 18 வயது வரை தமிழக அரசு மாதம் ₹2,000 வழங்க உள்ளது.

News November 21, 2025

கூட்டணி பேச்சுவார்த்தை: காங்., குழு அமைப்பு?

image

2026 தேர்தலில் திமுக – காங்., கூட்டணி உறுதியான நிலையில், அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்த காங்., தலைமை குழு அமைத்துள்ளதாம். கிரிஷ் ஜோடங்கர், செல்வப்பெருந்தகை, சுரே ஜெக்டே, நிவேதி ஹால்வா, ராஜேஷ் குமார் ஆகியோர் இக்குழுவில் இடம்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. 2021 தேர்தலில் திமுக கூட்டணியில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்., 18 இடங்களில் வென்றது. 2026-ல் காங்., எத்தனை தொகுதிகளில் போட்டியிடலாம்?

error: Content is protected !!