News May 17, 2024

கெஜ்ரிவால் உதவியாளர் மீது வழக்குப்பதிவு

image

ஆம் ஆத்மி பெண் எம்.பி ஸ்வாதி மாலிவாலை டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் தனி செயலாளர் பிபவ்குமார் தாக்கியதாக சர்ச்சை எழுந்தது. இவ்விவகாரத்தில், ஸ்வாதி மாலிவால் 4 நாட்களாக அமைதி காத்து வந்த நிலையில், போலீசாரிடம் தனது தரப்பு வாக்குமூலத்தை பதிவு செய்தார். இதன் அடிப்படையில் பிபவ்குமார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், கெஜ்ரிவால் இல்லத்தில் பணியில் இருந்த ஊழியர்களிடம் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

Similar News

News October 20, 2025

ஒரே ஆண்டில் ₹50,000 வரை விலை உயர்ந்த ஜரிகை!

image

தங்கம், வெள்ளியை தொடர்ந்து பட்டு சேலைகள் சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறியுள்ளது. ஜரிகை உற்பத்திக்கு, தங்கமும், வெள்ளியும் முக்கிய மூலப்பொருட்களாக உள்ளன. எனவே, ஜரிகையின் விலையும் ஒரே ஆண்டில் ₹50,000 வரை உயர்ந்துள்ளது. கடந்தாண்டு ஏப்ரலில் ₹85,000-மாக இருந்த 1 கிலோ ஜரிகையின் விலை, தற்போது ₹1.35 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்த தீபாவளிக்கு நீங்க பட்டு சேலை வாங்குனீங்களா?

News October 20, 2025

மழைக்கு கடந்த 18 நாள்களில் 20 பேர் பலியான சோகம்

image

மழையால் கடந்த 18 நாள்களில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக TN அரசு அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அக்.1 – 18-ம் தேதி வரை கடலூர், தி.மலை உள்ளிட்ட மாவட்டங்களில் 10 பெண்கள், 8 ஆண்கள், 2 குழந்தைகள் என மொத்தம் 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 21 பேர் காயமடைந்துள்ளனர். மழையால் 435 குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

News October 20, 2025

அதர்மத்தை நீக்கி, தர்மத்தை கடைபிடிப்போம்: CPR

image

தீபாவளி நாளில் அதர்மத்தை நீக்கி, தர்மத்தை கடைபிடிப்போம் என்று துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அவரது தீபாவளி வாழ்த்தில், பின்தங்கிய பிரிவினருக்கு நமது ஆதரவை நீட்டுவோம் என்று குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு வீட்டிலும் ஏற்றப்படும் தீபங்கள் இரவை கூட்டாக ஒளிர செய்வது போல், நமது அர்ப்பணிப்பும் உறுதியும் பாரதத்தின் கூட்டு வளர்ச்சிக்கு வழிகாட்டட்டும் என்றும் அவர் வாழ்த்தியுள்ளார்.

error: Content is protected !!