News January 19, 2025
ஈரோடு நாதக வேட்பாளர் மீது வழக்குப் பதிவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சீதாலட்சுமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தில் முறையாக முன் அனுமதி பெறாமல் ஈரோடு பேருந்து நிலையத்தில் பிரசாரம் மேற்கொண்டதற்காக, வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட 8 பேர் மீது BNS 171 பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு நாதக கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
Similar News
News August 25, 2025
விஜய் பட சாதனையை முறியடித்த ரஜினியின் ‘கூலி’..!

விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான ‘கோட்’ படம் ஒட்டுமொத்தமாக ₹465 கோடி வசூலித்திருந்தது. இந்த வசூலை ரஜினியின் ‘கூலி’ படம் 11 நாள்களிலேயே முறியடித்திருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், படத்தின் வசூல் ₹500 கோடியை நெருங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. ரஜினி நடிப்பில் ஏற்கெனவே ‘2.O’ மற்றும் ‘ஜெயிலர்’ ஆகிய படங்கள் ₹600 கோடிக்கு மேல் கலெக்ஷனாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
News August 25, 2025
இனி ஆம்புலன்ஸை தாக்கினால் சிறை தண்டனை

திருச்சி EPS பிரச்சாரத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை அதிமுகவினர் தாக்கிய சம்பவம் சர்ச்சையானது. இந்நிலையில், ஆம்புலன்ஸ் வாகனம் & ஓட்டுநர் மீது தனி நபரோ, கூட்டமாகவோ தாக்குதல் நடத்தினால் 3-10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது. கைதாகுபவர்கள் மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதியப்படும் எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
News August 25, 2025
BREAKING: தமிழக ஆசிரியர்களுக்கு நற்செய்தி

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சென்னை மயிலாப்பூரை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை ரேவதி பரமேஸ்வரன் மற்றும் திருப்பூர் பாரதியார் நூற்றாண்டு அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தினத்தையொட்டி செப்.5-ம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் ஜனாதிபதி திரெளபதி முர்மு இந்த விருதை வழங்க உள்ளார்.