News April 21, 2024
கர்நாடக துணை முதல்வர் மீது வழக்குப்பதிவு

கர்நாடகாவில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெங்களூரு புறநகர் தொகுதியில் போட்டியிடும் தனது சகோதரர் சுரேஷ்க்கு ஆதரவாக பிரசாரம் செய்த சிவக்குமார், பல்வேறு உத்தரவாதங்களை அளித்துள்ளார். காங்கிரஸுக்கு வாக்களிக்கும்படி வாக்காளர்களுக்கு அழுத்தம் கொடுப்பதாக தேர்தல் அதிகாரிகள் புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News November 12, 2025
4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக IMD தெரிவித்துள்ளது. இதன்காரணமாக நெல்லை மாவட்ட மலைப்பகுதிகள், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. மேலும், வரும் 17-ம் தேதி வரை தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
News November 12, 2025
நீண்ட ஆயுளுடன் வாழ இதை செய்யுங்க!

மாறிவரும் வாழ்க்கைச்சூழலில், நமது உடல் ஆரோக்கியம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, நோய்களை தவிர்த்து உடல்நலத்தை பேண சில செயல்முறைகளை வேண்டியது அவசியமாகிறது. நம் முன்னோர்கள் பின்பற்றிய பழக்கவழக்கங்கள் நோய் நொடியின்றி நீண்ட ஆயுளுடன் வாழ வழிவகை செய்தன. அதனை தற்போது நகர்ப்புறங்களிலும் எளிதாக பின்பற்றலாம். அவற்றை மேலே Swipe செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
News November 12, 2025
இனி SMS-களுக்கும் கட்டணம்!

கோடாக் மகிந்திரா வங்கியில் மினிமம் பேலன்ஸாக ₹10,000 வைத்திருக்க வேண்டும். அதை பராமரிக்காமல் இருந்தால், மாதத்திற்கு 30 SMS மட்டுமே இலவசம் என அந்த வங்கி அறிவித்துள்ளது. 30 SMS-களுக்கு பிறகு, ஒரு SMS-க்கு ₹0.15 வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது. வரும் டிச.7 முதல் இது நடைமுறைக்கு வர உள்ளது. UPI, ATM, செக் டெபாசிட், டெபிட், கிரெடிட் கார்ட் பரிவர்த்தனை என அனைத்து SMS-களுக்கும் இது பொருந்தும்.


