News April 13, 2024
சர்ச்சைக்குரிய பாஜக எம்பி மீது வழக்குப்பதிவு

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும், எம்.பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உ.பி.,யின் கைசர்கஞ்ச் தொகுதிக்கு பாஜக இன்னும் வேட்பாளரை அறிவிக்காத நிலையில், அங்கு மீண்டும் சீட் கேட்டு அடம்பிடித்து வரும் பிரிஜ் பூஷண் சிங், காத்ரா தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு 25 முதல் 30 வாகனங்கள் புடைசூழ அனுமதியின்றி பயணித்துள்ளார்.
Similar News
News October 16, 2025
WTO-வில் இந்தியா மீது புகார் செய்த சீனா

மின்சார வாகனங்கள் மற்றும் பேட்டரி உற்பத்திக்கு இந்தியா வழங்கும் மானியங்கள், உலக வர்த்தக விதிகளுக்கு எதிரானது என சீனா, WTO-வில் புகார் அளித்துள்ளது. இந்தியாவின் மானியங்கள் உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவித்து, சீன நிறுவனங்களுக்கு நியாயமற்ற போட்டியை உருவாக்குவதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. இந்த உதவிகளை நிறுத்த கோரிக்கை விடுத்துள்ள சீனா, பிரச்சினை குறித்து ஆலோசனை நடத்த அழைப்பு விடுத்துள்ளது.
News October 16, 2025
இந்தி திணிப்புக்கு தடையா? TN FACTCHECK விளக்கம்

தமிழ்நாட்டில் கட்டாய இந்தி திணிப்பை தடுக்க, தமிழக அரசு சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப் போவதாக காலையில் <<18012166>>ஒரு தகவல்<<>> வெளியானது. இந்தி பேனர்கள், விளம்பர பலகைகள், திரைப்படங்கள் மற்றும் பாடல்களுக்கு தடைவிதிக்கப் போவதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தது. ஆனால், அது முற்றிலும் பொய்யான செய்தி, அப்படியான திட்டம் எதுவும் தமிழக அரசுக்கு இல்லை என TN FACTCHECK தெரிவித்துள்ளது.
News October 16, 2025
SPAM கால் தொல்லையா? இதை உடனே பண்ணுங்க

கடந்த சில ஆண்டுகளில் SPAM கால் வருவது அதிகரித்துள்ளது. கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகள் தருவதாகக் கூறி மீண்டும் மீண்டும் அழைப்புகள் வருவது பலரையும் எரிச்சலடைய செய்கிறது. இதற்காக TRAI ஏற்கனவே DND என்ற கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. 1909 என்ற எண்ணை அழைப்பதன் மூலமோ அல்லது SMS செய்வதன் மூலமோ டெலிமார்க்கெட்டிங் அழைப்புகளைத் தடுக்கலாம். DND செயலி மூலம் TRAI-க்கு நேரடியாகப் புகார் செய்யலாம்.