News April 24, 2024
கடலூரில் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு

பாஜக தலைவர் அண்ணாமலை மீது கடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஸ்ரீமுஷ்ணத்தில் கோமதி என்ற பெண் கொல்லப்பட்ட விவகாரத்தில் அண்ணாமலை போலியான தகவலைப் பரப்பியதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, வன்முறையைத் தூண்டுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News January 2, 2026
பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

CBSE-ல் பயிலும் 6, 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு திறன் சார் கல்வி (SKILL EDUCATION) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது, கணிதம், அறிவியல் போல திறன் சார் கல்வியும் இனி ஒரு பாடமாக இருக்கும். இதில், AI, கோடிங், கைவினை பொருள்கள் தயாரித்தல் உள்ளிட்டவை குறித்து கற்பிக்கப்படும். இதனால், மாணவர்கள் தங்களது தனித் திறனை வளர்த்து கொள்ளலாம்.
News January 2, 2026
ஜன.19-ல் திமுக டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு

கடந்த டிச.29-ல் பல்லடத்தில் ‘திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு’ நடைபெற்றது. இந்நிலையில், ஜன.19-ல் தஞ்சை செங்கிப்பட்டியில் ‘திமுக டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு’ நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனிமொழி தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டில் CM ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். தேர்தல் பணிகளுக்கு நிர்வாகிகளை தயார்படுத்தும் விதமாக அடுத்தடுத்து மாநாடுகளை திமுக நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
News January 2, 2026
PM KISAN அடுத்த தவணைத் தொகை எப்போது கிடைக்கும்?

PM KISAN திட்டத்தின் 22-வது தவணைத் தொகையை (₹2,000) மத்திய அரசு அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் விவசாயிகளின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தவணைத் தொகை தாமதமின்றி கிடைக்க, விவசாயிகள் e-KYC அப்டேட் செய்வது அவசியம். <


