News December 27, 2024
ஜெயக்குமார் மீது வழக்குப் பாய்ந்தது

மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், சென்னை கிண்டியிலுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தை அதிமுகவினர் நேற்று தடையை மீறி முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர். அப்பாேது அதிமுக EX அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டாேரை போலீசார் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்தனர். இந்நிலையில், கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் ஜெயக்குமார் உள்ளிட்ட 900 பேர் மீது பாேலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Similar News
News July 9, 2025
நமீபியா புறப்பட்டார் PM மோடி

பிரேசிலில் இருந்து நமீபியா நாட்டிற்குப் புறப்பட்டார் PM மோடி. முன்னதாக, பிரேசில் பிரதமர் லுலா உடன் இருநாட்டு வர்த்தகம், பாதுகாப்பு, சுகாதாரம் உள்பட பல்வேறு குறித்து மோடி பேசினார். இதனையடுத்து, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உள்ளிட்ட சில புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும், இரு நாட்டுத் தலைவர்களும் சர்வதேச தீவிரவாதத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
News July 9, 2025
Bharat Bandh: TN-ல் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும்

மத்திய அரசுக்கு எதிராக <<16998000>>13 தொழிற்சங்கங்கள்<<>> இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. இதனால், பள்ளிகளுக்கு விடுமுறை என சிலர் சோஷியல் மீடியாக்களில் பதிவிட்டு வருகின்றனர். ஆனால், வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் செயல்படும் எனவும், பஸ்களும் வழக்கம்போல் இயக்கப்படும் என அந்தந்த துறைகளின் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரம், குமரி, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் காலையிலேயே பஸ் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
News July 9, 2025
Drug Test: இந்தியாவின் Ex. உலக சாம்பியனுக்கு ஒரு வருடம் தடை!

இந்தியா மல்யுத்த வீராங்கனை ரித்திகா ஹூடா(22) தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக ஒரு வருடத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஜூலை 17 முதல் நடைபெறவுள்ள Ranking Series tournament, & செப்டம்பரில் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் அவர் கலந்து கொள்ளவும் தடை செய்யப்பட்டுள்ளார். அக்டோபர் 2023-ல் நடைபெற்ற 23 வயதுக்குட்பட்ட மல்யுத்த உலக சாம்பியன்ஷிப்பை ரித்திகா வென்றிருந்தார்.