News March 18, 2025
ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கு: சிபிஐ விசாரிக்க தடை

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பதவிக் காலத்தில் ஆவின் நிறுவனத்தில் ₹3 கோடி வரை முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கின் 400 பக்க ஆவணங்களை, மொழிபெயர்த்து தருமாறு ஆளுநர் கேட்பதாக உச்ச நீதிமன்றத்தில் TN அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஆளுநர் கேட்ட ஆவணங்களை 2 வாரத்திற்குள் வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Similar News
News September 22, 2025
29-ம் தேதி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்

வரும் 29-ம் தேதி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர். திமுகவின் தேர்தல் அறிக்கையில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகளில் இதுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இதை கண்டித்தும், உடனே சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.
News September 22, 2025
விஜய் பிளானில் மீண்டும் மாற்றம்

வரும் 27-ம் தேதி திட்டமிடப்பட்டிருந்த விஜய்யின் சேலம் சுற்றுப்பயணத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. முன்னதாக 27-ம் தேதி சென்னை, திருவள்ளூரில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்தார். ஆனால் அதில் மாற்றம் செய்து, நாமக்கல், சேலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டது. தற்போது மீண்டும் சேலத்துக்கு பதிலாக கரூரில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என கூறப்படுகிறது.
News September 22, 2025
டிரம்ப் எச்சரிக்கையை கண்டுகொள்ளாத ஆப்கன்

பக்ராம் விமானப்படை தளத்தை கொடுக்க சொல்லி டிரம்ப் விடுத்த எச்சரிக்கைக்கு பதிலடி கொடுத்துள்ளது ஆப்கன் அரசு. ஆப்கன் நிலத்தில் ஒரு அங்குலம் கூட வழங்க முடியாது எனவும், நாட்டின் சுதந்திரம் மிகவும் முக்கியம் எனவும் பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமை அதிகாரி ஃபாசிஹுதீன் ஃபித்ரத் கூறியுள்ளார். அந்த விமானப்படை தளம் சீனாவுக்கு அருகில் இருப்பதால் அங்கு படைகளை குவிக்க டிரம்ப் விரும்புகிறார்.