News March 18, 2025
ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கு: சிபிஐ விசாரிக்க தடை

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பதவிக் காலத்தில் ஆவின் நிறுவனத்தில் ₹3 கோடி வரை முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கின் 400 பக்க ஆவணங்களை, மொழிபெயர்த்து தருமாறு ஆளுநர் கேட்பதாக உச்ச நீதிமன்றத்தில் TN அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஆளுநர் கேட்ட ஆவணங்களை 2 வாரத்திற்குள் வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Similar News
News March 18, 2025
IPL பிளேஆப் சுற்றுக்கு செல்லும் அணிகள் எவை? ஜகாதி கணிப்பு

2025 IPL தொடரில் பிளேஆப் சுற்றுக்கு முன்னேறும் அணிகள் குறித்து முன்னாள் CSK வீரர் சதாப் ஜகாதி தனது கணிப்பினை வெளியிட்டுள்ளார். சென்னை, கொல்கத்தா, குஜராத் ஆகிய 3 அணிகளும், டெல்லி மற்றும் லக்னோ அணிகளில் ஏதாவது ஒன்றும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என கணித்துள்ளார். வரும் 23ஆம் தேதி தொடங்கும் IPL தொடரில் முதல் ஆட்டத்தில் பெங்களூரு அணியை KKR அணி எதிர்கொள்கிறது. உங்க கணிப்பு என்ன? கமெண்ட் பண்ணுங்க.
News March 18, 2025
3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்: IMD

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமானது வரை மழை பெய்ய கூடும் என IMD கணித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை, இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஆனால், அடுத்த 3 நாட்களுக்கு இயல்பை விட 2–3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆகவே, குழந்தைகள், முதியவர்கள் வெயிலில் செல்லும்போது கூடுதல் கவனம் தேவை.
News March 18, 2025
ரஷ்யாவை மிரள வைக்கும் ரகசியம் என்ன? (1/2)

போர்க்களம் மாறலாம், போர்கள் தான் மாறுமா? என்பார்கள். ஆனால் போர் வடிவம் இப்போது மாறிவிட்டது. அதற்கு உக்ரைன் – ரஷ்யா இடையே நடக்கும் போர் உதாரணம். அமெரிக்காவுக்கே ரஷ்யா அச்சுறுத்தலாக இருந்தாலும், தன்னிடம் இருக்கும் நவீன தொழில்நுட்பத்தை வைத்து ரஷ்யாவையே மிரள வைத்து வருகிறது உக்ரைன். அப்படி என்ன மாதரியான ஆயுதத்தை இந்த போரில் உக்ரைன் பயன்படுத்தி இருக்கிறது தெரியுமா? ட்ரோன்கள்தான்…