News April 21, 2024

ரூ.2 கோடி எடுத்துச் சென்ற பாஜக நிர்வாகி மீது வழக்கு

image

பெங்களூருவில் காரில் ரூ.2 கோடி பணத்தை எடுத்துச் சென்ற பாஜக நிர்வாகி உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். ஐடி விசாரணையில் அந்தப் பணத்திற்கான கணக்கு இருந்ததால் விதிமீறல் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தேர்தல் விதிகளின்படி பணத்திற்கான பெறுநர் படிவம் இல்லாததால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Similar News

News January 4, 2026

BREAKING: பள்ளிகள் திறப்பு.. தமிழக அரசு புதிய உத்தரவு

image

விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ள நிலையில், மாணவர்கள் பாதுகாப்பில் எந்த சமரசமும் கூடாது என HM-களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. பள்ளி வளாகத்தில் உள்ள மின் இணைப்புகளில் மின்கசிவு உள்ளதா, பள்ளி கட்டடங்கள் மழையால் பலவீனமாகி உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்து தரமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News January 4, 2026

அல்லு அர்ஜுனை ஓவர்டேக் செய்வாரா ரன்வீர் சிங்?

image

இந்தியாவில் ₹800 கோடி வசூலைக் கடந்த முதல் நேரடி பாலிவுட் திரைப்படம் என்ற பெருமையை ’துரந்தர்’ பெற்றுள்ளது. ரன்வீர் சிங் நடித்துள்ள இப்படம் ஏற்கெனவே உலகளவில் ₹1,000 கோடி வசூலை எட்டிவிட்டது. எனினும் தற்போது வரை ₹830 கோடியுடன் அதிக வசூல் செய்த இந்திப் படம் என்ற சாதனை அல்லு அர்ஜுனின் இந்தி பதிப்பான ’புஷ்பா 2’ வசம் உள்ளது. இந்நிலையில் துரந்தர் அந்த சாதனையை விரைவில் முறியடிக்க வாய்ப்புள்ளது.

News January 4, 2026

விஜய்யின் கொள்கை வரவேற்கத்தக்கது: சீமான்

image

ஆட்சியில் பங்கு கொடுப்போம் என்பது விஜய்யின் பெருந்தன்மையை காட்டுகிறது என சீமான் தெரிவித்துள்ளார். காரைக்குடியில் பேசிய அவர், ஆட்சியில் பங்கு என்பதை விஜய் கொள்கையாக வைத்துள்ளார். தமிழகத்திலும் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன. மத்திய காங்., பாஜக ஆட்சிகளில் கூட்டணி கட்சிகளுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கப்பட்டுள்ளது. அது தவறில்லை. வரவேற்கத்தக்கது தான் என பேசியுள்ளார்.

error: Content is protected !!