News March 18, 2024
மதுரை அருகே 7 பேர் மீது வழக்கு

மேலூர் அருகே கரையிப்பட்டியில் உள்ள ஒரு கோவிலின் பூசாரியாக உள்ளவர் சின்னையா. அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித் மது போதையில் நேற்று அவரிடம் தகராறில் ஈடுபட்டார். இதை சின்னையாவின் மருமகன் சிவா தட்டி கேட்க, அவரை பீர் பாட்டிலால் ரஞ்சித் தலையில் தாக்கி மண்டையை உடைத்தார். இது தொடர்பாக ரஞ்சித், சுமதி, கார்த்திகா உட்பட 7 பேர் மீது கீழவளவு போலீசார் இன்று வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Similar News
News August 25, 2025
மதுரை: ரூ.64,000 சம்பளம், வங்கி வேலை! நாளை கடைசி

மதுரை மக்களே, SBI வங்கியில் வாடிக்கையாளர் சேவை மற்றும் சேல்ஸ் பிரிவில், 5,180 ஜூனியர் அசோசியேட்ஸ் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News August 25, 2025
மதுரை – துபாய் விமானத்தில் திடீர் கோளாறு..!

துபாயிலிருந்து மதுரை வந்த ஸ்பைஸ்ஜெட் விமானம் இயந்திர கோளாறு காரணமாக மதுரை விமான நிலையத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் துபாய் செல்லவிருந்த 160-க்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிலையத்தில் தவித்து வருகின்றனர். மதுரை விமான நிலையத்தில், மாலை 5 மணிக்கு விமானம் புறப்படும் என விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
News August 25, 2025
மதுரை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

முதலில்<
பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.
<<17509957>>தொடர்ச்சி<<>>