News April 22, 2025

மீனவர்கள் படகு மீது மோதிய சரக்கு கப்பல்!

image

கன்னியாகுமரியின் முட்டம் அருகே தனியார் மீன்பிடி துறைமுகத்தில் படகு மீது கப்பல் மோதியது. கடியப்பட்டணத்தைச் சேர்ந்த அருள் ரமேஷ் என்பவரின் விசைப்படகில் 21 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். சுமார் 22 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது பெரிய சரக்கு கப்பல் ஒன்று படகு மீது மோதியது. நல்வாய்ப்பாக மீனவர்கள் காயமின்றி உயிர் தப்பிய நிலையில், மீன் பிடிக்காமல் கரைக்கு திரும்பியுள்ளனர்.

Similar News

News December 7, 2025

தர்மம் மீண்டும் வெல்லும்: ராமதாஸ்

image

<<18492965>>PMK உள்கட்சி<<>> விவகாரத்தில் தலையிட EC-க்கு அதிகாரம் இல்லை என டெல்லி HC தெரிவித்தது. இந்நிலையில், 46 ஆண்டுகள் உழைத்து வளர்த்த பாமகவை, என்னிடம் இருந்து பறிக்க செய்த சதி முறியடிக்கப்பட்டுள்ளதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார். வரும் தேர்தலில் கட்சியின் அங்கீகாரத்தை மீட்பேன் என்று கூறியுள்ள அவர், தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மீண்டும் வெல்லும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

News December 7, 2025

பிரதமர் மோடி உருக்கமாக இரங்கல்

image

கோவாவின், அர்போரா பகுதியில் ஏற்பட்ட <<18492944>>தீ விபத்தில்<<>> 23 பேர் உயிரிழந்த நிலையில், ஜனாதிபதி திரெளபதி முர்மு மற்றும் PM மோடி உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து துயரத்தை அளிப்பதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு துணை நிற்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். PM மோடி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ₹2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ₹50,000 வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

News December 7, 2025

BREAKING: அறிவித்தார் செங்கோட்டையன்

image

தவெகவில் இணைந்தபிறகு கொங்கு மண்டலத்தில் கட்சியை வலுப்படுத்த செங்கோட்டையன் தீவிரமாக பணியாற்றுகிறார். இந்நிலையில், தனது சொந்த மாவட்டமான ஈரோட்டில் டிச.16-ம் தேதி நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்தில் விஜய் பங்கேற்க இருப்பதாக செங்கோட்டையன் அறிவித்துள்ளார். மேலும், அனுமதி கேட்டு கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்த உடனே பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என்றார்.

error: Content is protected !!