News April 22, 2025

மீனவர்கள் படகு மீது மோதிய சரக்கு கப்பல்!

image

கன்னியாகுமரியின் முட்டம் அருகே தனியார் மீன்பிடி துறைமுகத்தில் படகு மீது கப்பல் மோதியது. கடியப்பட்டணத்தைச் சேர்ந்த அருள் ரமேஷ் என்பவரின் விசைப்படகில் 21 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். சுமார் 22 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது பெரிய சரக்கு கப்பல் ஒன்று படகு மீது மோதியது. நல்வாய்ப்பாக மீனவர்கள் காயமின்றி உயிர் தப்பிய நிலையில், மீன் பிடிக்காமல் கரைக்கு திரும்பியுள்ளனர்.

Similar News

News December 2, 2025

இலங்கைக்கு இந்தியா துணை நிற்கும்: PM மோடி

image

இலங்கையை புரட்டிப்போட்ட டிட்வா புயலால் இதுவரை 360-க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தொலைபேசி வாயிலாக அதிபர் அநுரகுமார திசாநாயக்கவுடன் பேசிய மோடி, இந்தியா இலங்கை மக்களுக்கு உறுதுணையாக நிற்கும் என தெரிவித்துள்ளார். மேலும் சாகர்பந்து நடவடிக்கையின் கீழ் அனைத்து அத்தியாவசிய உதவிகளையும் இந்தியா வழங்கும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

News December 2, 2025

பிறந்தநாள் வாழ்த்து அனுப்புங்க

image

இன்று (டிச.2) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

News December 2, 2025

பொருளாதார குற்றவாளிகளால் ₹57,082 கோடி இழப்பு

image

நிதி முறைகேடுகளில் ஈடுபட்டு நாட்டில் இருந்து தப்பியோடியவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து காங்., MP முராரிலால் மீனா லோக்சபாவில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, மொத்தம் 15 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இவர்களால் ₹57,082 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது; இவர்களிடம் இருந்து ₹19,817 கோடி மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

error: Content is protected !!