News April 1, 2025
ஆங்கிலம் பேச வரலையா? அரசு பள்ளியில் விரைவில் புதுதிட்டம்

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், ஆங்கிலத்தில் பேச சிரமப்படுகின்றனர். இந்த குறையை போக்க மாநில அரசு, அடுத்த கல்வியாண்டில் ஆங்கில தொடர்புதிறன் பயிற்சியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. ஆங்கிலத்தில் திறமை வாய்ந்த, புதிய வழிகள் மூலம் போதிக்கும் ஆசிரியர்களை தேர்வு செய்து, அவர்கள் மூலம் 6-8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கில தொடர்புதிறன் பயிற்சியை கொடுக்க அரசு பரிசீலித்து வருகிறது.
Similar News
News November 8, 2025
BREAKING: வீடியோவை கொடுத்தார் விஜய்!

கரூர் பிரசாரத்தின் போது விஜய் பயணித்த பஸ்ஸின் சிசிடிவி காட்சிகளை தான்தோன்றிமலை சிபிஐ அலுவலகத்தில் விஜய் தரப்பு ஒப்படைத்தது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான விசாரணையில், பிரசார பஸ் சிசிடிவி காட்சிகளை 3 நாள்களுக்குள் சமர்ப்பிக்க சிபிஐ கோரியிருந்தது. இந்நிலையில், அது தொடர்பான காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்கை தவெக அலுவலகத்தின் உதவியாளர் குரு, சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
News November 8, 2025
ஆஸ்கர் அருங்காட்சியகத்தில் முதல் இந்திய படம்!

ஆஸ்கர் வழங்கும் அகாடமி அமைப்பு, சினிமா துறைக்கென உருவாக்கிய மியூசியம், அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் மியூசியம். இங்கு இதுவரை எந்த இந்திய படமும் திரையிடப்பட்டது இல்லை. ஆனால், இந்த குறையை நீக்கி நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளது ‘பிரமயுகம்’. ராகுல் சதாசிவன் இயக்கத்தில், மம்மூட்டி நடிப்பில் வெளியான பிரமயுகம், இந்திய அளவில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது.
News November 8, 2025
டிச.12-ல் பாமக சார்பில் ஆர்ப்பாட்டம்: ராமதாஸ்

இடைக்கால தீர்வாக வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி டிச.12-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ராமதாஸ் அறிவித்துள்ளார். மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்த அவர், அந்தந்த சாதியின் மக்கள்தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்தினார்.


