News March 14, 2025

நாளை தேர்வு எழுத முடியாதா… சிபிஎஸ்இ மீண்டும் வாய்ப்பு

image

ஹோலி பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. மேலும் சில மாநிலங்களில் நாளை (மார்ச் 15) கொண்டாடப்படவுள்ளது. இதனால் நாளை நடைபெறவுள்ள சிபிஎஸ்இ இந்தித் தேர்வுகளில் அந்த மாநில மாணவர்களால் பங்கேற்க முடியாது. அத்தகைய மாணவர்கள் பயப்படத் தேவையில்லை, தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்காக நடத்தப்படும் சிறப்புத் தேர்வுகளின்போது இவர்கள் அந்த தேர்வுகளை எழுதலாம் எனக் கூறியுள்ளது.

Similar News

News March 3, 2026

தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட்!

image

திமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சுதீஷ், வேட்பாளர் யார் என்பதை பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பார் என தெரிவித்தார். சட்டமன்ற தொகுதிகள் பங்கீடு குறித்த அறிவிப்பு இன்னும் ஒருவாரத்தில் தெரியவரும் எனவும் கூறியுள்ளார். அதேசமயம் ராஜ்யசபா சீட் சுதீஷுக்கு ஒதுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

News March 3, 2026

காங்கிரஸை சீண்டிய திமுக அமைச்சர்!

image

தேர்தலில் திமுக தனி மெஜாரிட்டி பெற்று ஆட்சி அமைக்கும் என ரகுபதி கூறியுள்ளார். புதுக்கோட்டையில் பேசிய அவர், திமுகவுடன் இருந்தால்தான் சட்டப்பேரவைக்குள் நுழைய முடியும் என்பது காங்கிரஸ் தலைமைக்கு தெரியும் என்றும், அந்த அந்தஸ்தை இழக்க அவர்கள் விரும்பமாட்டார்கள் எனவும் தெரிவித்தார். <<19287048>>தொகுதி பங்கீடு தொடர்பாக இழுபறி நீடிக்கும் நிலையில்<<>>, காங்கிரஸை சீண்டும் வகையில் ரகுபதி பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.

News March 3, 2026

பள்ளி மாணவி கர்ப்பம்.. சிறுவன் சிக்கினான்

image

புத்தகப் பையை சுமக்கும் வயதில், வயிற்றில் குழந்தையை சுமப்பது எத்தகைய கொடுமை? சிவகங்கையில் +1 மாணவியை கிஷோர் என்ற சிறுவன், பிரவீன், சாமியார் ராமநாதன் ஆகிய 3 பேரும் ரேப் செய்துள்ளனர். இதனால், உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவி ஹாஸ்பிடல் சென்றபோது, அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. பெற்றோர் அளித்த புகாரில் மூவர் மீதும் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கிஷோர் கைது செய்யப்பட்டுள்ளான்.

error: Content is protected !!