News May 7, 2025
RTI மூலம் அரசு ஊழியர்களின் சொத்துகளை கேட்க முடியாது?

அரசு ஊழியர்களின் சொத்து விவரங்களை வெளியிட முடியாது என்று தமிழக தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரியில் நீர்த்தேக்க திட்ட உதவி பொறியாளராக பணியாற்றிய காளிப்பிரியனின் சொத்து, கடன், வருமான வரி விவரங்களை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சீனிவாசன் என்பவர் கோரி இருந்தார். இதற்கு பொதுநலன் இல்லாமல் தனிப்பட்ட விவரங்களை வெளியிட முடியாது எனக் கூறி அவரது விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
Similar News
News December 16, 2025
இந்தியா-ஜோர்டன் இடையே 5 முக்கிய ஒப்பந்தங்கள்

அரசு முறை பயணமாக PM மோடி, ஜோர்டன் சென்றிருந்த நிலையில், இருநாடுகள் இடையே 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. நீர் மேலாண்மை, டிஜிட்டல் வளர்ச்சி, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியில் ஒத்துழைப்பு, 2025-2029 வரை இருநாடுகள் இடையே கலாசார பரிமாற்ற நிகழ்வு, UNESCO அங்கீகாரம் உடைய எல்லோரா, பெட்ரா இடையே இரட்டை ஒப்பந்தம் போடப்பட்டுள்ளன. இது IND-JOR உறவை மேலும் வலுவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News December 16, 2025
புதிய தலைமை தகவல் ஆணையர் நியமனம்

புதிய தலைமை தகவல் ஆணையராக (Chief Information Commissioner) ராஜ்குமார் கோயல் பதவியேற்றுள்ளார். இவர் PM மோடி, அமித்ஷா, ராகுல் காந்தி ஆகியோரின் ஆலோசனைக்கு பின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், 1990-ம் ஆண்டு பேட்ச் அருணாச்சல பிரதேசம்- கோவா- மிசோரம்- யூனியன் பிரதேசங்கள் பிரிவை சேர்ந்த ஓய்வுபெற்ற IAS அதிகாரி ஆவார். சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் செயலாளராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.
News December 16, 2025
திருப்பதி சொர்க்க வாசல் தரிசனம்.. பக்தர்களுக்கு ஃப்ரீ!

திருப்பதியில் வரும் 30-ம் தேதி முதல் ஜனவரி 8-ம் தேதி வரை சொர்க்க வாசல் தரிசனம் நடைபெறுகிறது. இதில், ஜனவரி 2 முதல் 8-ம் தேதி வரை தரிசன டோக்கன் பெறாவிட்டாலும், பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் 3 நாள்கள், டிசம்பர் 30 – ஜனவரி 1-ம் தேதி வரையிலான தரிசன டோக்கன்கள் குலுக்கல் முறையில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த பதிவை அனைத்து ஏழுமலையானின் பக்தர்களுக்கும் பகிரவும்.


