News May 7, 2025

RTI மூலம் அரசு ஊழியர்களின் சொத்துகளை கேட்க முடியாது?

image

அரசு ஊழியர்களின் சொத்து விவரங்களை வெளியிட முடியாது என்று தமிழக தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரியில் நீர்த்தேக்க திட்ட உதவி பொறியாளராக பணியாற்றிய காளிப்பிரியனின் சொத்து, கடன், வருமான வரி விவரங்களை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சீனிவாசன் என்பவர் கோரி இருந்தார். இதற்கு பொதுநலன் இல்லாமல் தனிப்பட்ட விவரங்களை வெளியிட முடியாது எனக் கூறி அவரது விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Similar News

News December 9, 2025

₹4,000 தரும் PM யாசஸ்வி திட்டம்.. அவகாசம் நீட்டிப்பு

image

பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுக்கு ₹4,000 வழங்கும் PM யாசஸ்வி உதவித் தொகை திட்டத்திற்கான புதுப்பித்தல், புதிய விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. டிச.15 வரை <>http://scholarships.gov.in<<>> இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டம் மூலம் 9, 11-ம் வகுப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

News December 9, 2025

விஜய்க்கு அரசியல் தெரியாது: நயினார் நாகேந்திரன்

image

புதுச்சேரிக்கு வளர்ச்சி திட்டங்களை மத்திய அரசு கொண்டு வரவில்லை என குற்றஞ்சாட்டிய விஜய்யை நயினார் கடுமையாக விமர்சித்துள்ளார். ஒரு கவுன்சிலர் கூட ஆகாமல் நேரடியாக CM அரியணையில் அமர்வதற்கு விஜய் ஆசைப்படுவதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத், ஜல் ஜீவன் உள்ளிட்ட திட்டங்கள் தொடர்பாகவும், அரசியல் பற்றியும் விஜய்க்கு ஏதாவது தெரியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

News December 9, 2025

முடி அடர்த்தியா வளர இந்த 2 பொருள்கள் போதும்

image

ஒருவரின் முக அழகை மெருகேற்றுவது முடியாக தான் இருக்கிறது. இதனால் அதீத முடி உதிர்வால் சிலர் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இதனை சரி செய்ய 2 பொருள்கள் போதும். முட்டை & தயிரில் புரதம், பையோட்டின் அதிக அளவில் இருப்பதால் முடி சார்ந்த பிரச்னைகளை இது சரி செய்கிறது. இதற்கு, வாரத்திற்கு இருமுறை முட்டையின் வெள்ளைக் கரு & ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து ஹேர் பேக் போட்டுவந்தால் முடி அடர்த்தியாக வளரும். SHARE.

error: Content is protected !!