News May 7, 2025
RTI மூலம் அரசு ஊழியர்களின் சொத்துகளை கேட்க முடியாது?

அரசு ஊழியர்களின் சொத்து விவரங்களை வெளியிட முடியாது என்று தமிழக தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரியில் நீர்த்தேக்க திட்ட உதவி பொறியாளராக பணியாற்றிய காளிப்பிரியனின் சொத்து, கடன், வருமான வரி விவரங்களை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சீனிவாசன் என்பவர் கோரி இருந்தார். இதற்கு பொதுநலன் இல்லாமல் தனிப்பட்ட விவரங்களை வெளியிட முடியாது எனக் கூறி அவரது விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
Similar News
News December 10, 2025
₹1.5 கோடி ஜாக்பாட்.. ஊரை விட்டே ஓடிய குடும்பம்!

பஞ்சாப்பில் கூலி வேலை செய்யும் நசீப் கவுருக்கு லாட்டரியில் ₹1.5 கோடி பரிசு விழுந்துள்ளது. இதில், சந்தோஷத்தின் உச்சத்திற்கே சென்றார். ஆனால் அது கொஞ்ச நேரம் கூட நீடிக்கவில்லை. செய்தி ஊர் முழுக்க பரவ கொள்ளைக்காரர்கள், ரவுடிகள் பணத்தை பறித்துவிடுவார்களோ என்ற அச்சத்தில், குடும்பத்துடன் ஊரையே காலி செய்து சென்றுவிட்டார். போலீசார் பாதுகாப்பு அளிப்பதாக உத்தரவாதம் அளிக்கவே, நிம்மதியடைந்துள்ளார்.
News December 10, 2025
ஓஷோ பொன்மொழிகள்

*நமது உடலைத் தவிர உலகில் வேறு எந்தக் கோவில்களும் இல்லை. *உங்களை நீங்களே ஏற்றுக்கொள்ளும் தருணத்தில், நீங்கள் அழகாக மாறுகிறீர்கள். *இதயம் ஒரு பூவைப் போன்றது. அது திறந்திருக்காவிட்டால், அது அதன் வாசனையை இந்த உலகிற்கு வெளியிட முடியாது. *உங்கள் இதயம் சொல்வதைக் கேளுங்கள். அதுவே உங்கள் ஒரே ஆசிரியர். *அன்பே தெய்வீகத்தை நோக்கிய முதல் படி, சரணடைதலே இறுதிப் படி. மேலும் இரண்டு படிகளே முழுப் பயணமுமாகும்.
News December 10, 2025
டிரம்ப்பை சீண்டியதால் இந்தியா மீது வரி: ரகுராம்

பாகிஸ்தான் உடனான போர் நிறுத்தத்திற்கு டிரம்ப் காரணமில்லை என்று கூறியதே, இந்தியா மீது அமெரிக்கா 50% வரிவிதிக்க காரணம் என RBI EX கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் கூற்று டிரம்ப்பின் ஈகோவை சீண்டிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால், பாகிஸ்தான் சிறப்பாக செயல்பட்டது. டிரம்ப்பால் தான் போர் நின்றது என்று துதிபாடியதால், அமெரிக்கா 16% வரியோடு நிறுத்திவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.


