News May 7, 2025
RTI மூலம் அரசு ஊழியர்களின் சொத்துகளை கேட்க முடியாது?

அரசு ஊழியர்களின் சொத்து விவரங்களை வெளியிட முடியாது என்று தமிழக தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரியில் நீர்த்தேக்க திட்ட உதவி பொறியாளராக பணியாற்றிய காளிப்பிரியனின் சொத்து, கடன், வருமான வரி விவரங்களை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சீனிவாசன் என்பவர் கோரி இருந்தார். இதற்கு பொதுநலன் இல்லாமல் தனிப்பட்ட விவரங்களை வெளியிட முடியாது எனக் கூறி அவரது விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
Similar News
News October 27, 2025
ஒரு மூத்தவனா சொல்றேன்… கேளுங்க: சீமான்

நடிக்கும்போது நோட்டை கொடுப்போம் வாழ்வதற்கு, நடிப்பதை நிறுத்திவிட்டால் நாட்டை கொடுப்போம் ஆள்வதற்கு என்ற போக்கு கொடுமையானது என சீமான் தெரிவித்துள்ளார். வேறு எங்கேயும் நடக்காத இது, இங்கு மட்டும் ஏன் நடக்கிறது என்று கேள்வி எழுப்பிய அவர், அரசியல் என்பது வாழ்வியல் என்று குறிப்பிட்டுள்ளார். தம்பி, தங்கைகளுக்கு ஒரு மூத்தவனாக சொல்கிறேன், அரசியலை படித்து தெரிந்து கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார்.
News October 27, 2025
வீராங்கனைகள் மீதும் தவறு.. அமைச்சரின் சர்ச்சை கருத்து

இந்தூரில் ஆஸி., கிரிக்கெட் அணி வீராங்கனைகள் பாலியல் சீண்டலுக்கு ஆளானதற்கு அவர்களே தான் காரணம் என்பது போல ம.பி., பாஜக அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா பேசியுள்ளார். இந்த சம்பவத்தில் இருந்து அவர்கள் பாடம் கற்க வேண்டும் என்ற அவர், யாரிடமும் சொல்லாமல் வெளியில் சென்றது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், கிரிக்கெட்டர்கள் பிரபலமானவர்கள் என்பதால், அவர்கள்தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
News October 27, 2025
விவசாயிகளுக்கு 80% மானியம் தரும் அரசு திட்டம்

விவசாயிகள் தங்களுக்கு தேவையான வேளாண் இயந்திரங்கள் வாங்க SMAM Subsidy Scheme மூலம் மத்திய அரசு 40% – 80% வரை மானியம் வழங்குகிறது. இதனால் அவர்களின் நேரமும், உழைப்பும், பணமும் மிச்சமாகிறது. இதற்கான அறிவிப்பு வெளியாகும் போது https://www.agrimachinery.nic.in/ -ல் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். மானியத்துக்கு தகுதி பெற்றால் உங்கள் மொபைல் நம்பருக்கு SMS அனுப்பப்படும். SHARE.


