News May 7, 2025

RTI மூலம் அரசு ஊழியர்களின் சொத்துகளை கேட்க முடியாது?

image

அரசு ஊழியர்களின் சொத்து விவரங்களை வெளியிட முடியாது என்று தமிழக தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரியில் நீர்த்தேக்க திட்ட உதவி பொறியாளராக பணியாற்றிய காளிப்பிரியனின் சொத்து, கடன், வருமான வரி விவரங்களை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சீனிவாசன் என்பவர் கோரி இருந்தார். இதற்கு பொதுநலன் இல்லாமல் தனிப்பட்ட விவரங்களை வெளியிட முடியாது எனக் கூறி அவரது விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Similar News

News December 13, 2025

12-வது போதும்.. மத்திய அரசில் 208 காலியிடங்கள்!

image

✱தேசிய பாதுகாப்பு அகாடமியில் (NDA) காலியாக உள்ள 208 பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ✱கல்வித்தகுதி: 12-வது தேர்ச்சி ✱வயது: 18- 21 ✱சம்பளம்: பதவிக்கேற்ப மாறுபட்டது ✱தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, அறிவுத்திறன் & ஆளுமைத் தேர்வுகள் நடைபெறும் ✱விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.12.2025 ✱விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் செய்யவும் ✱இப்பதிவை அனைவருக்கும் பகிரவும்

News December 13, 2025

சற்றுமுன் அதிரடியாக கைது செய்யப்பட்டார்

image

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை சென்னை ஆதம்பாக்கம் போலீசார் சற்றுமுன் அதிரடியாக கைது செய்துள்ளனர். பட தயாரிப்பாளரை மிரட்டியதாக பதியப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பு கூறுகிறது. ஆனால், இதை மறுத்த சவுக்கு சங்கர், சென்னை மாநகர ஆணையர் அருண், பினாமி மூலம் சொத்துகள் வாங்கி பல கோடி ரூபாய் முதலீடுகள் செய்துள்ள விவரங்களை நேற்று வெளியிட்டதாலேயே கைது செய்யப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

News December 13, 2025

பாமகவுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியது அதிமுக

image

ராமதாஸ், அன்புமணி என 2 தரப்புகளிடம் அதிமுக பேச்சுவார்த்தையை தொடங்கியதாக கூறப்படுகிறது. பாமக வாக்குகள் பிரிந்துவிடாமல் தடுக்க, இருவரையும் சமாதானப்படுத்தி ஒரே சின்னத்தில் போட்டியிட செய்ய அதிமுக விரும்புகிறதாம். இதற்காக இருதரப்பினரிடமும் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. பாமகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் 50%-ஐ ராமதாஸ் கேட்கும் நிலையில், 75%-ஐ கேட்டு அன்புமணி முரண்டு பிடிக்கிறாராம்.

error: Content is protected !!