News August 8, 2024

தூக்கம் வரவில்லையா? அப்போ இதை குடியுங்கள்!

image

உடலையும் மனதையும் சீர்படுத்தும் தூக்கத்தை தொலைத்து அவதிப்படுபவரா நீங்கள்? இனி கவலையே வேண்டாம். ஆழ்ந்த தூக்கத்தை ஏற்படுத்தும் மெலெட்டினின் ஹார்மோனை சுரக்க வைக்கும் ஆற்றல் நிறைந்தது திப்பிலி. திப்பிலி பொடியை மிதமான சூட்டில் பாலுடன் சிறிது பனைவெல்லம் சேர்த்தால் திப்பிலி பால் தயார். இதனை படுப்பதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பு குடியுங்கள் போதும் சரியான நேரத்தில் தூக்கம் வரும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

Similar News

News November 24, 2025

தேஜஸ் போர் விமானம் விபத்து.. HAL பங்குகளின் விலை சரிந்தது

image

வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் சற்று ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. இருப்பினும், அதில் பட்டியலிடப்பட்டுள்ள, பொதுத்துறை நிறுவனமான HAL பங்குகளின் விலை 8.5% சரிந்து, ₹4,205-க்கு வர்த்தகமாகி வருகின்றன. துபாய் ஏர்ஷோவில் தேஜஸ் போர் விமானம் விபத்துக்குள்ளானதால், அதை தயாரித்த HAL நிறுவனத்தின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.

News November 24, 2025

நீலிக்கண்ணீர் வடித்த பச்சைத் துரோகிகள் எங்கே: ஸ்டாலின்

image

டெல்டா விவசாயிகளின் கண்ணீர் துடைக்கத் துணை நிற்காமல், நீலிக்கண்ணீர் வடித்த பச்சைத் துரோகிகள் எங்கே என CM ஸ்டாலின் சாடியுள்ளார். சாகுபடிக் காலத்திற்கு முன்னதாகவே ஏன் அறுவடை செய்யவில்லை என்றெல்லாம் அரசியல் செய்தார் EPS. ஆனால், தற்போது நெல்லின் ஈரப்பதத்தை 22% ஆக உயர்த்த வலியுறுத்தி போராடும் விவசாயிகளுக்கு துணை நிற்காமல், யாரிடம் அனுமதி பெற வேண்டும் என EPS காத்திருக்கிறார் என்று கேள்வி எழுப்பினார்.

News November 24, 2025

Cyclone Alert… கனமழை வெளுத்து வாங்கும்

image

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று(நவ.24) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், குமரி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக 29-ம் தேதி வரை தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. SHARE IT.

error: Content is protected !!