News June 19, 2024
இந்தியாவை அச்சுறுத்தும் புற்றுநோய்

இந்தியாவில் புற்றுநோய் தொடர்ந்து அதிகரித்து வருவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்படும் 10 பேரில் 7 பேர் உயிரிழப்பதாகவும், வளர்ந்த நாடுகளில் 10க்கு 3 பேர் மட்டுமே உயிரிழப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. இதற்கு முக்கிய காரணம், ஏழை மக்கள் புற்றுநோய்க்கான சிகிச்சை பெறுவதற்கு தேவையான மருத்துவ கட்டமைப்பு இந்தியாவில் இல்லை எனக் கூறப்படுகிறது.
Similar News
News March 13, 2026
வங்கிக் கணக்கில் மேலும் ₹6,000.. CM ஸ்டாலின் அறிவிப்பு

வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் (BLO) ஊதியத்தை மேலும் ₹6,000 உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, BLO-க்களின் ஆண்டு ஊதியம் ₹6,000-ல் இருந்து ₹12,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஊக்கத் தொகையை ₹2,000 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. BLO ஊதியம் மற்றும் ஊக்கத் தொகை உயர்வுக்காக ₹99 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 13, 2026
ரஜினியை யாரும் மிரட்ட முடியாது: ரகுபதி

திமுக மிரட்டியதன் காரணமாகவே ரஜினி அரசியலுக்கு வரவில்லை என ஆதவ் அர்ஜுனா வைத்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார். ரஜினியை யாரும் மிரட்ட முடியாது என்றும் எந்த மிரட்டலுக்கும் அவர் அடிபணிய மாட்டார் எனவும் தெரிவித்துள்ளார். அரசியல் ஆதாயத்துக்காக விஜய் கட்சியினர் அப்பட்டமான பொய்யை சொல்வதாகவும் சாடியுள்ளார். ரஜினி திமுகவின் நண்பர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News March 13, 2026
தமிழ்நாட்டை உலுக்கிய மரணம்: அடுத்த அதிர்ச்சி தகவல்

பென்னிக்ஸ் ஜெயராஜ், அஜித்குமாரை தொடர்ந்து ஆகாஷ் மரணம் தமிழ்நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஆகாஷ் உடலில் 28 இடங்களில் காயம் இருந்ததாகவும், குறிப்பாக அவரின் மூளையில் ரத்தக்கசிவு இருந்ததாகவும் பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. போலீசாரிடம் இருந்து ஆகாஷ் தப்பிக்க முயன்றபோது காயம் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.


