News March 16, 2024
ரத்து..! நெல்லை கலெக்டர் அறிவிப்பு

வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெறும். தற்பொழுது பாராளுமன்ற தேர்தல் தேதி தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமுலுக்கு வந்தன. இதனால் நெல்லை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் இன்று (மார்ச் 16) தெரிவித்தார்.
Similar News
News December 29, 2025
நெல்லை மக்களே ரூ.78,000 மானியம் இன்றே APPLY பண்ணுங்க!

நெல்லை மாவட்டத்தில் பிரதமரின் சூரிய வீடு மின்சார திட்டத்தில் மானிய விலையில் அனைத்து வீட்டு மின் நுகர்வோரும் விண்ணப்பிக்கலாம். இதில் ஒரு கிலோ வாட் சூரிய தகடு பொருத்த ரூ.30,000, 2 கிலோ வாட்டிற்கு ரூ.60,000, 3கிலோ வாட் அல்லது அதற்கு மேல் ரூ.78,000 மானியமாக வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் <
News December 29, 2025
நெல்லை: மனைவி இறந்த சோகத்தில் கணவர் விபரீத முடிவு!

நெல்லை சொக்கட்டான் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் மயில்ராஜ் வயது (68). இவரது மனைவி மற்றும் ஒரே மகள் இறந்த நிலையில் தனிமையில் வாழ்ந்து வந்தார். இதனால் சோகத்தில் தவித்த அவர் நேற்று விஷம் குடித்து மயங்கினார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து சுத்தமல்லி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News December 29, 2025
நெல்லை: பேருந்து மோதி சம்பவ இடத்தில் பலி!

கங்கைகொண்டான் சிப்காட் அருகே ஆலடிப்பட்டியில் இருந்து 2 பேர் நேற்று பைக்கில் சென்றனர். அப்போது குமரியிலிருந்து பெங்களூரு நோக்கி சென்ற தனியார் ஆம்னி பஸ், பைக் மீது மோதியது. இதில் பைக்கில் வந்த ஓட்டப்பிடாரம் முனியசாமி 36 சம்பவ இடத்திலேயே இறந்தார். உடன் சென்ற உலகநாதன் படுகாயம் அடைந்தார். அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கங்கைகொண்டான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


