News April 30, 2024
சண்டிகேஸ்வரர் முன் சொடுக்கு போடலாமா?

சிவபெருமானுடன், பஞ்ச மூர்த்தியரில் ஒருவராக பவனி வருபவர் விசாரசர்மர் சண்டிகேஸ்வரர். ஈசனின் அடியார் கூட்டத் தலைவனான இவர், எப்போதுமே சிவ சிந்தனையில் ஆழ்ந்திருப்பார். இவரின் கவனத்தை தம் பக்கம் ஈர்க்க, பக்தர்கள் சந்நிதியில் கைகளைத் தட்டுவது, சொடுக்கு போடுவது, நூல் பிரித்துப் போடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இது பெரிய பாவச் செயலாகும். சைவ நெறிப்படி இவ்விதமான செயல்களில் ஈடுபடக் கூடாது.
Similar News
News August 27, 2025
பிரபல நடிகர் ஜாய் பானர்ஜி காலமானார்

பிரபல நடிகரும், அரசியல் தலைவருமான ஜாய் பானர்ஜி(62) காலமானார். மேற்கு வங்கத்தை சேர்ந்த இவர், புகழ்பெற்ற மிலன் திதி, நாக்மதி, சாப்பார் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பாஜகவில் இணைந்த இவர், 2014 லோக்சபா தேர்தலில் பிர்பும் தொகுதி, 2019 தேர்தலில் உலுபேரியா தொகுதியில் BJP சார்பில் போட்டியிட்டு TMC-யிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார். ஜாய் பானர்ஜி மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP
News August 27, 2025
இதுக்கு சரியான பதில் சொல்லுங்க பாப்போம்?

அடுத்தடுத்து நியூஸ் படிச்சி டயர்ட்டாகி இருக்கும் உங்களின் மூளையை வாங்க கொஞ்சம் சுறுசுறுப்பாக்குவோம். மேலே உள்ள படத்தில் இருக்கும் கேள்வியை கவனியுங்க. 1= 2, 4= 20, 6= 42, 9= 90, அப்போ 10= ? என்ன வரும் யோசிச்சு பாருங்க. HINT: இதில் 1=2 எப்படி வந்துச்சுன்னு மட்டும் யோசிங்க. மத்த நம்பர்களுக்கான பதில்கள் ஈசியாக கிடைச்சிடும். எத்தனை பேர் சரியா பதில் கமெண்ட் பண்றீங்க’னு பாப்போம்?
News August 27, 2025
தற்கொலை செய்ய டிப்ஸ் வழங்கிய ChatGPT

USA-ல் 16 வயது சிறுவனுக்கு பல்வேறு ஐடியாக்களை வழங்கி, தற்கொலைக்கு உதவியதாக, OpenAI மற்றும் அதன் CEO சாம் ஆல்ட்மேன் மீது பெற்றோர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். தற்கொலை முயற்சி தோல்வி அடைந்தால் அதை எப்படி மறைப்பது, தற்கொலை கடிதத்தை எப்படி எழுதுவது என பல டிப்ஸ்களை ChatGPT வழங்கியதாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதையடுத்து பாதுகாப்பு நெறிமுறைகளை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக OpenAI தெரிவித்துள்ளது.