News April 22, 2025
சொந்த வீடு கட்ட முடியுமா? கலக்கத்தில் மிடில் கிளாஸ்

தமிழகத்தில் ஜல்லி, எம்.சாண்ட் போன்ற கட்டுமான பொருட்களின் விலை ஒரே அடியாக யூனிட்டுக்கு ₹1,000 வரை உயர்கிறது. இதற்கு தமிழக அரசு அனுமதியளித்திருப்பதால் சொந்த வீடு கட்டுபவர்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர். யூனிட் ₹4,000க்கு விற்று வந்த ஜல்லி, இனி ₹5,000க்கு விற்கப்படும். எம்.சாண்ட் விலையும் ₹6,000 ஆக உயர்கிறது. இதனால் சொந்த வீடு கட்ட நினைப்போரின் கனவு, கனவாகவே முடிந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
Similar News
News February 26, 2026
திங்கள்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை

அய்யா வைகுண்டசாமியின் அவதார தினத்தையொட்டி, <<19236842>>குமரி, தென்காசி, நெல்லையை<<>> தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கும் மார்ச் 4-ல் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இயங்காது. மேலும், மாசி மக திருவிழாவையொட்டி மார்ச் 2-ல் (திங்கள்கிழமை) தஞ்சாவூர் மாவட்டத்திற்கும் உள்ளூர் விடுமுறையாகும். இதனை ஈடுசெய்ய மார்ச் 14 வேலைநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT
News February 26, 2026
நல்லகண்ணுவை பின்பற்றும் அரசியல்வாதி யார்?

நல்லகண்ணு தன் பெயருக்கேற்றபடி வாழ்வில் நல்ல பார்வை கொண்டிருந்தவர் என பார்த்திபன் கூறியுள்ளார். செய்தியாளா்களிடம் பேசிய அவர், நல்லகண்ணுவுக்கு மாலை போட்ட அரசியல்வாதிகளில் மிகச்சிலரை தவிர, அவரை பின்பற்றுபவர்கள் யாராவது இருக்கிறார்களா என கேள்வி எழுப்பினார். அத்துடன் வரும் தேர்தலில் அரசியல்வாதிகளிடம் பணம் வாங்காமல் ஓட்டுப்போடுவதே, நல்லகண்ணுவுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி என பேசியுள்ளார்.
News February 26, 2026
அஜித் குமார் மரணம்.. அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்

கோயில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில் அடுத்தடுத்து அதிர்ச்சியூட்டும் திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. வழக்கில் தொடர்புடைய மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம் தலைமறைவாகியுள்ளார். அவரை கைது செய்து ஆஜர்படுத்துமாறு மதுரை கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. மேலும், அவருடன் திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் உள்ளிட்ட மூவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


