News April 22, 2025
சொந்த வீடு கட்ட முடியுமா? கலக்கத்தில் மிடில் கிளாஸ்

தமிழகத்தில் ஜல்லி, எம்.சாண்ட் போன்ற கட்டுமான பொருட்களின் விலை ஒரே அடியாக யூனிட்டுக்கு ₹1,000 வரை உயர்கிறது. இதற்கு தமிழக அரசு அனுமதியளித்திருப்பதால் சொந்த வீடு கட்டுபவர்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர். யூனிட் ₹4,000க்கு விற்று வந்த ஜல்லி, இனி ₹5,000க்கு விற்கப்படும். எம்.சாண்ட் விலையும் ₹6,000 ஆக உயர்கிறது. இதனால் சொந்த வீடு கட்ட நினைப்போரின் கனவு, கனவாகவே முடிந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
Similar News
News January 31, 2026
BREAKING: கூட்டணி முடிவை அறிவித்தார் விஜய்

‘I’am not a kingmaker, I will win’ என வரும் தேர்தலில் தனித்து களம் காண்பதை முதல் முறையாக விஜய் உறுதி செய்துள்ளார். NDTV-க்கு அவர் அளித்த நேர்காணலில், தான் என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பதாக அதிரடியாக கூறியுள்ளார். கடந்த சில காலமாக ஆட்சியில் பங்கு எனக் கூறி வந்த தவெக காங்கிரஸ், அமமுக, பாமகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், தற்போது தனித்து களம் காணத் தயாராகியுள்ளது.
News January 31, 2026
கர்ப்பிணிகளுக்கு ₹11,000 வழங்கும் PMMVY திட்டம்!

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகளுக்கு ₹11 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் அனைத்து கர்ப்பிணிகளுக்கும், கருவுற்றது முதல் குழந்தை பிறந்தது வரை என 3 தவணைகளில் பணம் வழங்கப்படும். இத்திட்டத்துக்கு விண்ணப்பிக்க https://pmmvy.wcd.gov.in இணையதளத்தை பார்வையிடுங்கள். இந்த முக்கிய திட்டத்தை அனைவரும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.
News January 31, 2026
முதல் பெண் DCM.. யார் இந்த சுனேத்ரா பவார்?

MH-ன் முதல் பெண் DCM-ஆக பதவியேற்கும் சுனேத்ரா பவார் அரசியலில் ஆக்டிவாக இருப்பவர். கடந்த லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்தாலும், இவருக்கு ராஜ்யசபா MP பதவி வழங்கப்பட்டது. 2010-ல் Organic Farming-காக அமைப்பை தொடங்கி ‘கிரீன் வாரியர்’ விருது பெற்றார். பிறகு பிரான்சில் உலக தொழில்முனைவோர் மன்றத்தின் சிந்தனை குழு உறுப்பினராக இருப்பது, கட்சிக்காக பிரசாரங்கள் செய்வது என களப்பணிகளில் இவர் ஈடுபட்டுள்ளார்.


