News March 12, 2025
வடமாநிலங்களை TN உடன் ஒப்பிடலாமா? துரை வைகோ

தமிழ்நாட்டுடன் ஒப்பிடும் போது வடமாநிலங்கள் 40 ஆண்டுகள் பின்தங்கியுள்ளதாக துரை வைகோ தெரிவித்துள்ளார். தேசிய கல்விக் கொள்கையில் தாங்கள் கோரும் சில மாற்றங்களைச் செய்தால், அதில் கையெழுத்திடுவதில் எந்த பிரச்னையும் இல்லை எனவும், ஆங்கிலம் படித்ததால் தான் தமிழர்கள் உலகம் முழுவதும் கோலோச்சி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே, தங்கள் குழந்தைகளுக்கு இரு மொழியே போதுமானது என தெரிவித்துள்ளார்.
Similar News
News March 12, 2025
IPL: சிஎஸ்கே அணி போட்டி டிக்கெட் விலை ரூ.1.23 லட்சம்

IPLஇல் சேப்பாக்கத்தில் வரும் 23ஆம் தேதி நடக்கும் போட்டியில் மும்பை அணியுடன் சிஎஸ்கே மோதுகிறது. இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை அதிகாரப்பூர்வமாக தொடங்காத போதிலும், சில இணையதளங்களில் மறைமுகமாக டிக்கெட் விற்பனை நடக்கிறது. இதில் குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.17,804 ஆகவும், அதிகபட்ச டிக்கெட் விலை ரூ.1.23 லட்சமாகவும் உள்ளது. நீங்கள் டிக்கெட் வாங்கி விட்டீர்களா? கமெண்ட் பண்ணுங்க.
News March 12, 2025
3 மொழிகள் படிப்பதால் என்ன தவறு? சுதா மூர்த்தி

இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவியும், ராஜ்ய சபா எம்பியுமான சுதா மூர்த்தி, மும்மொழிக் கொள்கையை ஆதரித்து பேசியுள்ளார். தனக்கு 7 முதல் 8 மொழிகள் தெரியும் எனவும், அதனால் குழந்தைகள் பல மொழிகளை கற்பது அவர்களுக்கு மிகவும் பயன்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் மத்திய அரசு vs தமிழ்நாடு அரசு இடையேயான மோதல் முற்றி வரும் நிலையில், அவர் இப்படி கூறியுள்ளார்.
News March 12, 2025
SBI UPI சேவைகள் முடங்கியது

நாடு முழுவதும் SBI வங்கியின் UPI சேவைகள் முடங்கியதால் வாடிக்கையாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இரு தினங்களுக்கு முன் இதேபோல வங்கி சேவைகள் முடங்கின. பின்னர், ஒரு மணி நேரத்திற்குப் பின் சுமூகமானது. அதேபோல, இன்று இரவு 7 மணி முதல் UPI சேவைகள் முடங்கியுள்ளன. நாட்டின் நம்பர் 1 பொதுத்துறை வங்கி இப்படி செயல்படலாமா என்று வாடிக்கையாளர்கள் விமர்சித்து வருகின்றனர். உங்களுக்கு சேவை கிடைக்கிறதா? கமெண்ட்.