News August 5, 2024

வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க முடியுமா?

image

2013இல் காங்கிரஸின் மத்திய அரசில், உள்துறை இணையமைச்சராக முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் பதவி வகித்தபோது தேசிய பேரிடர் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “அரசின் வழிகாட்டுதல்களில் ஓர் இயற்கை பேரிடரை தேசிய பேரிடராக அறிவிக்க எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை” எனப் பதிலளித்துள்ளார். இதே நிலைதான் தற்போதுவரை தொடர்வதால் வயநாடு நிலச்சரிவு பேரிடராக அறிவிக்கப்படுவது சந்தேகமே.

Similar News

News January 24, 2026

பூத் நிலை அலுவலர்களுக்கு ECI எச்சரிக்கை

image

SIR பணிகளில், வாக்காளர் பட்டியலின் துல்லியம் மற்றும் நம்பகத்தன்மை பாதிக்கப்படக்கூடாது என மாநிலத் தேர்தல் அதிகாரிகளுக்கு ECI உத்தரவிட்டுள்ளது. SIR பணிகளில் தவறு நடந்தால் பூத் நிலை அலுவலர்களை (BLO) இடைநீக்கம் செய்வதோடு துறை ரீதியான விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. மேலும், குற்றச்செயல் தொடர்பான வழக்குகளில் FIR பதிவு செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

News January 24, 2026

பள்ளிகள் விடுமுறை.. கூடுதல் சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

image

குடியரசு தின விடுமுறை இன்று முதல் தொடங்குவதால் பள்ளி மாணவர்கள் குஷியில் உள்ளனர். சொந்த ஊருக்கு பயணிகள் சிரமமின்றி செல்வதற்கு ஏதுவாக சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து 1,350 சிறப்பு பஸ்கள் நேற்று முதல் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்புவதற்காக 800 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன. எனவே, இங்கே <>கிளிக்<<>> செய்து உங்கள் டிக்கெட்டை புக் செய்யுங்கள்.

News January 24, 2026

இனி பேங்க் Cheque-ல் இப்படி எழுதக்கூடாதா?

image

பேங்க் செக் எழுதுவதற்கு கருப்பு இங்க் பயன்படுத்த கூடாது என SM-ல் தகவல் பரவிவருகிறது. ஆனால், அதனை முற்றிலுமாக மறுத்து மத்திய உண்மை சரிபார்ப்பு குழு பதிவிட்டுள்ளது. RBI-ன் விதிமுறைகளின் படி, வாடிக்கையாளர்கள் நிரந்தர மையை பயன்படுத்த மட்டுமே அறிவுறுத்தப்படுகிறார்கள். அது எந்த கலர் பேனாவாக வேண்டுமானலும் இருக்கலாம். இது போன்ற தகவல்களை நம்பிவிட வேண்டாம். SHARE.

error: Content is protected !!