News April 27, 2025
ரேஷன் பருப்பில் கலப்படமா? ஆய்வு செய்ய உத்தரவு

ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட இருந்த பருப்பில் கலப்படம் செய்யப்பட்டதை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அண்மையில் கண்டுபிடித்தார். இதுதொடர்பாக 2 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த செய்திகள் வெளியானதையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள வாணிப கிடங்குகள், ரேஷன் கடைகளில் ஆய்வு செய்து, பருப்பின் தரத்தை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உணவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
Similar News
News September 16, 2025
மோடிக்கு பிறந்தநாள் பரிசு அனுப்பிய மெஸ்ஸி

நாளை 75வது பிறந்தநாள் கொண்டாடும் PM மோடிக்கு கால்பந்து வீரர் மெஸ்ஸி பரிசு அனுப்பியுள்ளார். 2022-ம் ஆண்டு நடந்த கால்பந்து உலக கோப்பையை அர்ஜென்டினா வென்ற நிலையில், அந்த தொடரில் தான் பயன்படுத்திய ஜெர்ஸியில் கையெழுத்திட்டு, அதை மோடிக்கு அவர் பரிசாக அனுப்பி வாழ்த்து கூறியுள்ளார். இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியா வரும் மெஸ்ஸி, PM மோடியை சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
News September 16, 2025
PAK-கிற்கு செல்ல வேண்டிய நீர் இனி இந்தியாவிற்குள் பாயும்

சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு வழங்க வேண்டிய நீரை, நம் நாட்டில் பற்றாக்குறையுள்ள மாநிலங்களுக்கு திருப்பிவிட அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் தெரிவித்துள்ளார். இதன்மூலம் விவசாயிகள், பொதுமக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, பாக்.-க்கு செல்ல வேண்டிய சிந்து நதிநீரை மத்திய அரசு நிறுத்தியது.
News September 16, 2025
BREAKING: கூட்டணி முடிவை வெளியிட்டார் டிடிவி

டெல்லி பாஜக தலைமை எல்லாத்தையும் சரி செய்துவிடும் என்று யாரும் பகல் கனவு காண வேண்டாம்; கூட்டணிக்கு அழைத்தாலும் இனி போக மாட்டேன் என்று TTV அறிவித்துள்ளார். விஜய் மற்றும் தனியாக போட்டியிட்டு வந்த சீமானும் இந்தமுறை கூட்டணி அமைக்கும் முயற்சியில் இருப்பது எனக்கு தெரியும் என சூசகமாகவும் தெரிவித்துள்ளார். இதனால், 2026-ல் விஜய் அல்லது சீமானுடன் கூட்டணி அமைத்து TTV போட்டியிடலாம் என சொல்லப்படுகிறது.