News April 27, 2025
ரேஷன் பருப்பில் கலப்படமா? ஆய்வு செய்ய உத்தரவு

ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட இருந்த பருப்பில் கலப்படம் செய்யப்பட்டதை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அண்மையில் கண்டுபிடித்தார். இதுதொடர்பாக 2 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த செய்திகள் வெளியானதையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள வாணிப கிடங்குகள், ரேஷன் கடைகளில் ஆய்வு செய்து, பருப்பின் தரத்தை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உணவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
Similar News
News September 13, 2025
தீபாவளிக்கு 4 நாள்கள் விடுமுறையா?

தீபாவளி திங்களன்று(அக்.20) வருவதால், அடுத்த மாதத்தில் 3 நாள்கள் தொடர் விடுமுறை. இந்நிலையில், அக்.21 அன்றும் விடுமுறை அளிக்கப்படுமா என எதிர்பார்ப்பு நிலவுகிறது. கடந்த காலங்களில் தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை அளித்து, அதனை ஈடுசெய்ய ஏதேனும் ஒரு சனிக்கிழமை வேலைநாளாக அறிவிக்கப்படும். இந்த முறையும் அப்படி செய்தால் 4 நாள்கள் தொடர் விடுமுறை வரும். இதுகுறித்து அரசு விரைவில் தெரிவிக்க உள்ளது. SHARE IT.
News September 13, 2025
அதிமுக உடையாமல் பார்த்துக் கொள்ளுங்க EPS : கனிமொழி

கூட்டணி பற்றி பேசுவதற்கு முன்பு, EPS அவருடைய கட்சி உடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கனிமொழி மறைமுகமாக சாடியுள்ளார். தற்போதைய சூழலில் கட்சியை பாதுகாப்பாதே அதிமுகவுக்கும், இபிஎஸ்-க்கும் நல்லது எனக் கூறிய அவர், வரவிருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான பரப்புரையை விரைவில் தொடங்கவிருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக திமுக கூட்டணியை EPS கடுமையாக சாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
News September 13, 2025
யார் யார் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்?

2024-25 நிதியாண்டுக்கான வருமான வரி ரிட்டன் (ITR) தாக்கல் செய்ய <<17699112>>இன்னும் 2 நாள்களே <<>>உள்ளன. இந்நிலையில், ₹12 லட்சம் வரை வருமானம் இருந்தால், வரி செலுத்த தேவையில்லை என்ற தவறான தகவல் ஒன்று பரவி வருகிறது. ஆனால், 2025-26 நிதியாண்டு முதல் மட்டுமே இது பொருந்தும். இப்போதைக்கு ₹7 லட்சத்துக்கு மேல் வருமானம் இருந்தால் வரி செலுத்துவது அவசியம். அதேசமயம், 3 லட்சத்தை தாண்டினால் ITR தாக்கல் செய்வது கட்டாயம்.