News April 4, 2024
தினமும் காலையில் இட்லி, தோசை சாப்பிடலாமா?

நீரழிவு, உடல் பருமன் போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் காலையில் மாவுச் சத்து நிறைந்த இட்லி, தோசை உள்ளிட்ட உணவுகளை அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். மாறாக பழைய சாதத்துடன் சிறிது தயிர் கலந்து சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. காலையில் அதிக அளவில் உணவு எடுத்துக் கொள்ள தேவையில்லை. அதேநேரம் காலை உணவை எக்காரணம் கொண்டும் தவிர்க்கக்கூடாது எனவும் அறிவுறுத்துகின்றனர்.
Similar News
News January 20, 2026
காங்.-ல் ‘கோட்டா’ பாலிடிக்ஸ்: குமுறும் நிர்வாகிகள்

TN காங்.,-ன் <<18894402>>71 மாவட்ட தலைவர்கள்<<>> பட்டியல் கட்சிக்குள் புயலை கிளப்பியுள்ளது. ‘கோட்டா’ சிஸ்டத்தை ஒழிக்க நினைத்த ராகுல், ஒரு குழுவை அனுப்பி, நேர்காணல் நடத்தியுள்ளார். ஆனால், வெளியான பட்டியலை பார்த்து சில நிர்வாகிகள் அதிர்ந்துள்ளனராம். சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி என பல மாவட்டங்களில், முக்கிய தலைவர்களின் சிபாரிசு ‘கோட்டா’ சிஸ்டத்தில் தான் பதவி வழங்கியுள்ளனர் என அவர்கள் குமறுவதாக கூறப்படுகிறது.
News January 20, 2026
தினமும் தேங்காய் பால் குடிப்பதால் என்ன ஆகும்?

தினமும் தேங்காய் பால் குடிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுகின்றன. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாகும், நுரையீரல் பிரச்னைகள் சரியாகும், வயிற்றுப் புண், வயிற்றுப் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். இதில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது. இதனால், தினமும் காலை வெறும் வயிற்றில் இதை அனைவரும் குடிக்க வேண்டும் என டாக்டர்கள் சொல்றாங்க. SHARE.
News January 20, 2026
RCB அணியின் புதிய வரலாற்று சாதனை!

WPL தொடரில், தொடர்ந்து 6 போட்டிகளில் வெற்றி பெற்ற ஒரே அணி என்ற சாதனையை RCB அணி படைத்துள்ளது. 2025-ம் ஆண்டு சீசனில் தனது கடைசி போட்டியில் வென்றிருந்த RCB, 2026 சீசனில் தொடர்ச்சியாக 5 போட்டிகளை வென்றுள்ளது. நேற்றைய போட்டியில் வெற்றி பெற்று Play-off சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள அந்த அணி, கோப்பையை வெல்ல தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கெனவே 2024-ல் RCB சாம்பியன் பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


