News April 13, 2024

உணவு வழங்கல் துறையில் விண்ணப்பிக்கலாம்

image

PM கரீப் கல்யாண் திட்டத்தில், தகுதியற்ற பலரின் பெயரை ரேஷன் அட்டையில் இருந்து நீக்குவதாக மத்திய அரசு அறிவித்தது. இதனால் பல குடும்பங்களுக்கு ரேஷன் பொருள்கள் கிடைக்கவில்லை எனப் புகார் எழுந்ததால் மீண்டும் அவர்கள் பெயரை சேர்க்க உத்தரவிடப்பட்டது. அதன்படி ரேஷன் கார்டில் உங்கள் பெயரை சேர்க்க, உணவு வழங்கல் துறை அலுவலகத்திற்கு சென்று உரிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

Similar News

News July 10, 2025

இரவில் இடி-மின்னலுடன் மழை: IMD

image

இன்று (ஜூலை 9) இரவு 1 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்கள் பட்டியலை IMD வெளியிட்டுள்ளது. அதில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி-மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் IMD கணித்துள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா? கீழே கமெண்ட் பண்ணுங்க.

News July 10, 2025

மக்களுக்கு திமுக கொடுத்த பரிசு கடன் தான்: இபிஎஸ் சாடல்

image

திமுக ஆட்சிக்கு வந்த 50 மாதங்களில் மக்களுக்கு கொடுத்த பரிசு கிட்டத்தட்ட 4 லட்சம் கோடி கடன் மட்டுமே என இபிஎஸ் விமர்சித்துள்ளார். திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என தெரிவித்த அவர் தமிழ்நாட்டுக்கு விரைவில் விடிவுகாலம் வரவேண்டும் என்கின்ற மக்களின் கூக்குரலை தானறிவேன் எனவும் கூறியுள்ளார். அனைத்துத் தரப்பு மக்களின் பேராதரவுடன் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளார்.

News July 10, 2025

குஜராத் பாலம் இடிந்து விபத்து… பலி 11 ஆக உயர்வு

image

குஜராத்தில் பாலம் இடிந்து ஆற்றுக்குள் வாகனங்கள் விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 11-ஆக உயர்ந்துள்ளது. வதோதரா மாவட்டம் மஹிசாகர் ஆற்றின் மீது கட்டப்பட்டு இருந்த 40 ஆண்டுகால பழமையான பாலம் இடிந்து விழுந்தது. இதில் பாலம் மீது சென்ற வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்தன. இந்த விபத்தில் 2 சிறார்கள் உள்பட மொத்தம் 11 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். மேலும் 1 பெண் உள்ளிட்ட 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

error: Content is protected !!