News October 8, 2025
இன்று முதல் அமலுக்கு வந்தது

Google Pay, PhonePe, Paytm மூலம் பணம் அனுப்பும்போது இனி PIN நம்பரை உள்ளிடவேண்டிய அவசியமில்லை. மாறாக, முகம் (அ) கைரேகையை வைத்தே ₹5,000 வரை பணம் அனுப்பலாம். PIN நம்பரை விட இவை பாதுகாப்பானது என கருதி NCPI இதை நடைமுறைப்படுத்தியுள்ளது. Biometric முறை நடைமுறைக்கு வந்தாலும், PIN நம்பர் முறையும் தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
Similar News
News October 8, 2025
கரூர் செல்ல அனுமதி கேட்டார் விஜய்

கரூர் செல்ல விஜய்க்கு பாதுகாப்பு கேட்டு டிஜிபி அலுவலகத்தில் தவெக தரப்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை நேரில் சந்திக்க விஜய் தரப்பு பாதுகாப்பு கேட்ட நிலையில், கரூர் போலீஸ் எந்த பதிலும் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், டிஜிபி அலுவலகத்தில் நேரடியாக மனு அளிக்கப்பட்டுள்ளது. போலீஸ் அனுமதி அளித்த உடனே விஜய் கரூர் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
News October 8, 2025
கேப்டன் பதவி பறிக்கப்பட்ட பின் ரோஹித்தின் முதல் பேச்சு

கேப்டன் பதவி பறிபோன பிறகு முதல்முறையாக, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடர் குறித்து ரோஹித் சர்மா பேசியுள்ளார். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், அதை சரியாக பயன்படுத்த முயற்சி செய்வதாகவும், அணியின் வெற்றிக்கு சிறு காரணமாக இருப்பதை நினைத்து பெருமை கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
News October 8, 2025
தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டது ஏன்?

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக <<17946346>>தஷ்வந்துக்கு<<>> எதிராக முறையான ஆதாரம் இல்லை என SC தெரிவித்துள்ளது. குற்றம் நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட DNA மாதிரிகளும் குற்றச்சம்பவத்துடன் ஒத்துப்போகவில்லை. ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்ட CCTV காட்சிகளில் இருப்பது தஷ்வந்த் தான் என்பது முறையாக உறுதிபடுத்தவில்லை. சந்தேகத்திற்கு இடமில்லாமல் தஷ்வந்த் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்றும் கோர்ட் கூறியுள்ளது.