News March 17, 2025

IPL கேப்டன்களுக்கு அழைப்பு… பிசிசிஐ புதிய திட்டம்!

image

IPL திருவிழா வரும் 22ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில், 10 அணிகளின் கேப்டன்களுடன் கூட்டம் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இதற்காக வரும் 20-ல் மும்பையில் நடைபெறும் கூட்டத்தில் கேப்டன்கள், அணிகளின் மேனேஜர்கள் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில், IPL-ல் புதிதாக செய்யப்பட்டுள்ள மாற்றம் குறித்து தெரிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. அதன் பின் கேப்டன்களுக்கான போட்டோஷுட் நடத்தப்பட உள்ளது.

Similar News

News July 7, 2025

செல்போன் ரீசார்ஜ் கட்டணம் உயர்வு?

image

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டே கட்டணங்கள் கடுமையாக உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க முடிவெடுகப்பட்டுள்ளதாம். 5G விரிவாக்கம், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் இப்போது இதனை அமல்படுத்த தயாராகி வருகின்றன. பேசிக் பிளான்களை தவிர மற்றவைகளை உயர்த்தவே வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

News July 7, 2025

50 ஆபாச வீடியோக்கள்… சிக்கிய இந்து அமைப்பு நிர்வாகி

image

கர்நாடகாவில் இந்து அமைப்பு நிர்வாகியின் செல்போனில் 50-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஸ் மீது கல் வீசியதாக சமித் ராஜூ கைதாகி ஜாமினில் வெளியே வந்தார். கைதானபோது அவரது செல்போனை கைப்பற்றி போலீஸ் விசாரித்ததில் இந்த பகீர் தகவல் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவரை விசாரிக்க போலீஸ் திட்டமிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மேலும் பலர் சிக்கலாம் எனக் கூறப்படுகிறது.

News July 7, 2025

ஒரே வீட்டில் இப்படி இருந்தால் சமூகநீதி எங்கு இருக்கும்?

image

சமூகநீதியும், சாதிய ஒழிப்பும் வெறும் சொல்லாகவே இன்றும் இருப்பதாக சீமான் தெரிவித்துள்ளார். மேலும், ஒரே வீட்டில் முதல்வர், துணை முதல்வர் இருக்கும்போது எப்படி சமூகநீதி இருக்கும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் செயல்பட்டு வரும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி, கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும் என CM ஸ்டாலின் இன்று அறிவித்த நிலையில், சீமான் இவ்வாறு கூறியுள்ளார்.

error: Content is protected !!