News September 11, 2025
ராஜினாமா செய்தார் சி.பி.ராதாகிருஷ்ணன்

துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து சி.பி.ராதாகிருஷ்ணன், மகாராஷ்ரா மாநில கவர்னர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். நாளை (செப்.12) அவர் துணை ஜனாதிபதியாக பதவியேற்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே குஜராத் மாநில கவர்னரான ஆச்சார்யா தேவ்ரத், மகாராஷ்டிரா கவர்னர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 11, 2025
Beauty: 1 வாரத்தில் கருவளையம் நீங்க செம்ம டிப்ஸ்!

அதிக Stress, டென்ஷனால் கண்ணுக்கு கீழ் கருவளையம் வந்துவிட்டதா? கருவளையம் வந்துவிட்டதே என எண்ணி மேலும் Stress ஆகுறீங்களா? கவலையவிடுங்க. இதனை எளிமையான முறையில் சரி செய்யலாம். உருளைக்கிழங்கை நன்றாக அரைத்து அந்த பேஸ்டை கருவளையம் இருக்கும் இடத்தில் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். இதை ஒரு வாரத்திற்கு செய்து வந்தால் கருவளையம் நீங்கும். SHARE.
News September 11, 2025
விஜய் போட்டியிடும் தொகுதி இதுவா? வெளியான தகவல்

திருச்சியில் நாளை மறுநாள் விஜய் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார். இதற்கு காரணம் தற்போது தெரியவந்துள்ளது. தவெகவினர் சமீபத்தில் நடத்திய கணக்கெடுப்பில், திருச்சி கிழக்கு, திருவாடானை, மதுரை மேற்கு ஆகிய தொகுதிகளில் விஜய்-க்கு செல்வாக்கு இருப்பதும், இதில், திருச்சி கிழக்கில் போட்டியிட்டால் அவரின் வெற்றி உறுதி எனவும் தெரியவந்துள்ளது. இதனால்தான், திருச்சியை மையமாக வைத்து, பரப்புரையை தொடங்குகிறாராம்.
News September 11, 2025
சாமியார்களும் அவர்களின் சொத்து மதிப்பும்

இந்தியாவில் ஆன்மிக குருக்களுக்கு எப்போதுமே மக்களிடம் பேராதரவு உண்டு. உலகின் மற்ற நாடுகளை காட்டிலும், இந்தியாவில் தான் அதிக ஆன்மிக குருக்கள் தோன்றியுள்ளனர். ஆன்மிக சொற்பொழிவில் தொடங்கி உலகளவில் ஆசிரமங்களை நிறுவியது முதல் அவர்களின் சாம்ராஜியங்கள் விரிவடைந்துள்ளன. அந்த வகையில், ஊடகங்களில் வெளியான தகவலின் படி, இந்திய சாமியார்களின் சொத்து மதிப்பை மேலே Swipe செய்து தெரிந்து கொள்ளுங்கள்.