News March 11, 2025
சி.பி. ராதாகிருஷ்ணன் – இபிஎஸ் திடீர் சந்திப்பு

கோவையில் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்- இபிஎஸ் இருவரும் சந்தித்துக்கொண்டனர். எஸ்.பி வேலுமணி வீட்டு திருமணத்தில் கலந்துகொள்ள கோவை வந்த இருவரும், நிகழ்ச்சி முடிந்து சென்னை திரும்பும் பொருட்டு விமான நிலையம் வந்துள்ளனர். அப்போது இருவரும் சில நிமிடங்கள் தனியாக பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.
Similar News
News March 12, 2025
23 லட்சம் வேலை வாய்ப்பு… AI துறையில் ஜாக்பாட்..!

வரும் 2027இல் AI துறையில் 23 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என Bain and Company நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் இந்த துறையில் வேலைவாய்ப்பு 1.5 – 2 மடங்கு உயரும் எனவும், 2019 முதல் ஆண்டுதோறும் AI தொடர்பான வேலைவாய்ப்புகளும், ஊதியமும் 21% அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன், ஆஸி. போன்ற நாடுகளில் AI பணியாளர்களுக்கான தேவை அதிகமாக உள்ளது.
News March 12, 2025
அரசுப் பஸ்களில் இனி கண்டக்டர் வேலை இல்லை

அரசுப் பஸ்களில் இதுவரை டிரைவர்கள், கண்டக்டர்கள் என தனித்தனி ஆட்தேர்வு நடைபெற்றது. இனி நிரந்தர பணிக்கு கண்டக்டர் என தனியாக ஆட்தேர்வு செய்வதில்லை என அரசு முடிவெடுத்துள்ளது. டிரைவர், கண்டக்டர் ஆகிய 2 உரிமங்கள் வைத்திருப்போரையே தேர்வு செய்ய அரசு முடிவு செய்துள்ளது. எஸ்இடிசியில் 300 கி.மீ. தூரத்துக்கு மேல் செல்லும் பஸ்களில் இம்முறை ஏற்கெனவே உள்ளது. இனி மாநகரப் பேருந்துகளிலும் இது அமலாகவுள்ளது.
News March 12, 2025
இரவில் மழை கொட்டப் போகுது

தமிழகத்தில் இன்றிரவு மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.