News March 1, 2025
அமெரிக்க குற்றவாளி ஆனார் பைஜூஸ் ரவீந்திரன்

இந்திய தொழில் முனைவரான பைஜூஸ் ரவீந்திரனை அமெரிக்க நீதிமன்றம் குற்றவாளி என்று அறிவித்துள்ளது. அவர் தலைமையிலான பைஜூஸ் நிறுவனம், அமெரிக்காவில் 533 மில்லியன் டாலர் பணத்தை கையாடல் செய்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அவருடன் கேம்ஷாப்ட் என்ற நிதி நிறுவனமும் மோசடியில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த பரிவர்த்தனைகளை ரவீந்திரன் மறைக்க முயற்சித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
Similar News
News March 1, 2025
பாசிசம், பாதரசம்: விஜயை மறைமுகமாக சாடிய கருணாஸ்

பாசிசத்துக்கும், பாயாசத்திற்கும் வித்தியாசம் தெரியாத சில பாதரசங்கள் இன்றைக்கு தமிழக அரசை விமர்சித்து வருவதாக நடிகர் கருணாஸ் விமர்சித்துள்ளார். பாதரசம் எதிலும் ஒட்டாது, அதைப்போல இவர்கள் மக்களிடம் ஒட்ட மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார். பாதரசங்களை பாசிசம் உருவாக்கி, அவர்களுக்கு பாதுகாப்பையும் கொடுத்து வருவதாகவும் அவர் சாடியுள்ளார்.
News March 1, 2025
இன்றைய பொன்மொழிகள்

▶குச்சியைக் குச்சியால் சந்திக்க வேண்டும், கூர்வாளைக் கூர்வாளால் சந்திக்க வேண்டும். ▶மனசாட்சி உறங்கும் சமயத்தில் தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது ▶இழிவு செய்யும் நண்பர்களை விட, எதிர்த்து நிற்கும் பகைவர் மேல். ‘முடியுமா நம்மால்’ என்பது தோல்விக்கு முன்பு வரும் தயக்கம். ‘முடித்தே தீருவோம்’ என்பது வெற்றிக்கான தொடக்கம் ▶தனிமை போன்ற ஒரு கொடுமையும் இல்லை; அதைப்போல் ஒரு உண்மையான நண்பனும் இல்லை
News March 1, 2025
திமுக ஆட்சி மீண்டும் வேண்டும்: திருமாவளவன்

இந்தியாவுக்கே வழிகாட்டும் ஆற்றல் வாய்ந்த தலைவராக முதல்வர் ஸ்டாலின் இருப்பதாக திருமாவளவன் பாராட்டியுள்ளார். முதல்வரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், இந்த மண்ணையும், மக்களையும் பாதுகாக்க மீண்டும் திமுகவை ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என்றார். பெரியாரின் கருத்தியலையும், அம்பேத்கரின் சிந்தனைகளையும் பாதுகாக்க தமிழகத்தில் பாஜக காலூன்ற விடக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.