News January 24, 2025

இடைத்தேர்தல்: உதயநிதியின் மாஸ்டர் பிளான்

image

ஈரோடு (கி) தொகுதி இடைத்தேர்தலில் 80% வாக்குகளை பெற, Dy CM உதயநிதி திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த இடைத்தேர்தலில் காங்.க்கு 65% வாக்குகள் கிடைத்தன. இம்முறை ADMK, BJP என பிரதான எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்துவிட்டன. அத்துடன், DMK போட்டியிடுவதால் 80% வாக்குகளை பெற திட்டமிட்டுள்ளதாம். இதற்காக, கடைசி 3 நாள்கள் உதயநிதியும், சில அமைச்சர்களும் பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

Similar News

News November 25, 2025

தங்கம் விலையில் அதிரடி மாற்றம்

image

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ்(28g) தங்கம் $59.47 உயர்ந்து, $4,130-க்கு விற்பனையாகி வருகிறது. இது இந்திய சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாள்களாக இந்தியாவில் தங்கத்தின் விலை ஏற்றமும், இறக்கமும் கண்டு வருகிறது. நேற்று (நவ.24) மட்டும் சவரனுக்கு ₹880 குறைந்து, ₹92,160-க்கும் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

News November 25, 2025

கனமழை.. பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு

image

கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால், பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, *அறுந்து விழுந்த மின் கம்பிகளை தொடுவது & மிதிப்பது தவிர்க்கவும். *மின் கம்பம் அருகில் செல்வதையோ & தொடுவதையோ தவிர்க்கவும். *தெரு மற்றும் சாலையில் தேங்கியுள்ள மழை நீரில் நடப்பதை தவிர்க்கவும்.

News November 25, 2025

மீனவர் நலனில் PM மோடிக்கு அதிக அக்கறை: RN ரவி

image

மீனவர் நலனில் PM மோடி அதிக அக்கறை செலுத்தி வருவதாக கவர்னர் RN ரவி தெரிவித்துள்ளார். மீனவர் தின விழாவில் பேசிய அவர், மீனவ சமுதாய மக்களின் வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருவதாகவும் கூறினார். மேலும், மீனவர்கள் பிரச்னை குறித்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

error: Content is protected !!