News January 24, 2025
இடைத்தேர்தல்: உதயநிதியின் மாஸ்டர் பிளான்

ஈரோடு (கி) தொகுதி இடைத்தேர்தலில் 80% வாக்குகளை பெற, Dy CM உதயநிதி திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த இடைத்தேர்தலில் காங்.க்கு 65% வாக்குகள் கிடைத்தன. இம்முறை ADMK, BJP என பிரதான எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்துவிட்டன. அத்துடன், DMK போட்டியிடுவதால் 80% வாக்குகளை பெற திட்டமிட்டுள்ளதாம். இதற்காக, கடைசி 3 நாள்கள் உதயநிதியும், சில அமைச்சர்களும் பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
Similar News
News November 27, 2025
7 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!

தென்மேற்கு வங்க கடலில் <<18399959>>காற்றழுத்த தாழ்வு மண்டலம்<<>> உருவான நிலையில், சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 7 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற IMD அறிவுறுத்தியுள்ளது. பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிக்கிறது. வட தமிழக கடலோர பகுதிகளில் காற்று மணிக்கு 50- 60 கி.மீ., வேகத்தில் வீசும் என கூறப்பட்டுள்ளது.
News November 27, 2025
செங்கோட்டையனை தொடர்ந்து தங்கமணி விலகலா?

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்படவிருக்கும் தீர்மானங்கள் குறித்து நேற்று ஆலோசனை செய்யப்பட்டது. இதில், வேலுமணி, சி.வி.சண்முகம், ஆர்.பி.உதயகுமார், ஓ.எஸ்.மணியன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆனால், EX மினிஸ்டர் தங்கமணி, இந்த ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்துள்ளாராம். இதனால், செங்கோட்டையனை போலவே, தங்கமணியும் அதிமுகவில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் உண்மை தெரியவரும்.
News November 27, 2025
இன்னும் சற்றுநேரத்தில் விஜய்யுடன் இணைகிறார்

விஜய் முன்னிலையில், செங்கோட்டையன் தவெகவில் இணையவுள்ளதே இன்றைய ஹாட் டாபிக். மேலும், அவரது ஆதரவாளர்களான Ex MP சத்தியபாமா, அதிமுக முன்னாள் நிர்வாகிகள் கந்தவேல் முருகன், சுப்பிரமணியம், குறிஞ்சிநாதன், மௌடீஸ்வரன், பி.யூ.முத்துசாமி, எஸ்.எஸ்.ரமேஷ் உள்ளிட்டோரும் தவெகவில் இணையவுள்ளனராம். இது விஜய்க்கான கொங்கு அரசியலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.


