News January 24, 2025

இடைத்தேர்தல்: உதயநிதியின் மாஸ்டர் பிளான்

image

ஈரோடு (கி) தொகுதி இடைத்தேர்தலில் 80% வாக்குகளை பெற, Dy CM உதயநிதி திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த இடைத்தேர்தலில் காங்.க்கு 65% வாக்குகள் கிடைத்தன. இம்முறை ADMK, BJP என பிரதான எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்துவிட்டன. அத்துடன், DMK போட்டியிடுவதால் 80% வாக்குகளை பெற திட்டமிட்டுள்ளதாம். இதற்காக, கடைசி 3 நாள்கள் உதயநிதியும், சில அமைச்சர்களும் பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

Similar News

News November 22, 2025

மெட்ராஸ் HC வாயில்கள் மூடல்.. ஏன் தெரியுமா?

image

மெட்ராஸ் HC-ன் அனைத்து வாயில்களும் நாளை இரவு 8 மணி வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியில் ஜார்ஜ் டவுன், பாரிமுனை, பூக்கடை பகுதிகளுக்கு நடுவில் HC கட்டப்பட்டதால் அதன் வளாகத்தை வழிப்பாதையாக மக்கள் பயன்படுத்தி வந்தனர். நாளடைவில் வளாகத்தை மக்கள் உரிமை கோரி விடக்கூடாது என்பதற்காக HC-ன் வாயில்கள் வருடத்தின் ஒரு நாள் மூடப்படுகின்றன. இது நவ. இறுதி வாரத்தில் பின்பற்றப்படுகிறது.

News November 22, 2025

847 பந்துகளில் முடிந்த ஆஷஸ் டெஸ்ட்

image

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி 847 பந்துகளில் முடிவுக்கு வந்தது. 1895-ல் நடந்த டெஸ்ட் 911 பந்துகளில் முடிந்தது. அதன்பிறகு, கடந்த 130 ஆண்டுகளில் விரைவாக முடிந்த டெஸ்ட் இதுதான். அதேபோல, குறைந்த நேரத்தில் இங்கி., அணி 2 இன்னிங்ஸ்களையும் முடித்த போட்டியும் இதுதானாம். இங்கி., பேட்ஸ்மென்கள் இந்த டெஸ்டில் 405 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டனர்.

News November 22, 2025

Delhi Blast: எலக்ட்ரீசியன் கைது

image

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக படாமலூ பகுதியை சேர்ந்த துபைஃல் நியாஸ் பட் என்பவரை ஜம்மூ காஷ்மீர் போலீஸ் கைது செய்துள்ளது. எல்க்ட்ரீசியனான நியாஸ் பட், டெல்லி தாக்குதலுக்கு திட்டமிட்டவர்களில் ஒருவராக கண்டறியப்பட்டுள்ளார். தற்கொலைப்படை பயங்கரவாதி உமர் பரூக்கும், நியாஸும் ஒரே பகுதியில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர் ஏற்கெனவே கைதான அடீல் அகமதுக்கு AK47 கொடுத்தாரா என போலீஸ் சந்தேகிக்கிறது.

error: Content is protected !!