News March 16, 2024
திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் ?

முன்னாள் அமைச்சர் பொன்முடியின் சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அவர் சட்டமன்ற உறுப்பினராக தொடர்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியிலும் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இன்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது திருக்கோவிலூர் தொகுதி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
Similar News
News November 27, 2025
சிறப்பு வாக்காளர் திருத்த பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம்,79-சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சங்கராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களிடமிருந்து சிறப்புத் தீவிரத் திருத்தம்(SIR) பணியை ஆட்சியர் ஆய்வு செய்தார்.இதில் கணக்கீட்டுப் படிவங்களை சேகரித்து BLO Mobile App-ல் பதிவேற்றம் செய்யும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர்/ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று (நவ.27) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
News November 27, 2025
எஸ்.ஐ.ஆர். பணியை ஆய்வு செய்த ஆட்சியர் பிரசாந்த்!

(நவ.27) கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் எஸ். ஐ.ஆர் பணி மேற்கொண்டு வரும் பகுதியில் கள்ளக்குறிச்சி ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் ஆய்வு செய்து வருகிறார்.மேலும் பணிகள் குறித்து கேட்டறிந்து விரைவில் முடிக்க அறிவுறுத்தினார்.இதில் அனைத்து ஊராட்சிகளிலும் ஆய்வு செய்து அறிவுரை வழங்க உத்தரவிட்டார்.
News November 27, 2025
கள்ளக்குறிச்சிஆட்சியருக்கு கோவில் கும்பாபிஷேகம் மரியாதை

கள்ளக்குறிச்சி அருகே உள்ள ரிஷிவந்தியம் பகுதியில் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் இன்று (நவ.27) மாபெரும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்தில் கள்ளக்குறிச்சி ஆட்சியர் எம் எஸ் பிரசாந்த் மாலை மரியாதை அளித்து கோவில் நிர்வாகம் அவரை வரவேற்றனர். மேலும் ரிசிவந்தியின் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் உடன் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.


