News June 27, 2024

இடைத்தேர்தல் புறக்கணிப்பு – நெல்லை முபாரக்

image

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் நேற்று(ஜூன் 26) அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இடைத்தேர்தலை பொறுத்தவரை ஆளும் கட்சிக்கு ஆதரவாகவே அதிகாரிகள் நடவடிக்கை அமையும் என்பதால் இந்த இடைத்தேர்தலை எஸ்டிபிஐ கட்சி புறக்கணித்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Similar News

News January 8, 2026

நெல்லை: மயங்கி விழுந்து இளைஞர் பலி

image

அம்பையை சேர்ந்தவர் கட்டிடட தொழிலாளி சேர்மராஜ் (26). இவர் நேற்று திசையன்விளை அருகே வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மருத்துவமனை செல்ல டூவீலரில் ஏறியுள்ளார். அப்போது மயக்கமான அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சேர்மராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திசையன்விளை போலீசார் விசாரணை.

News January 7, 2026

இரவு காவல் பணி அதிகாரிகள் பட்டியல் அறிவிப்பு

image

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் இன்று இரவு முதல் நாளை ஜனவரி 8ஆம் தேதி காலை ஆறு மணி வரை சிறப்பு காவல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் பட்டியல் மாநகர காவல் துறை செய்தி குறிப்பில் வெளியிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளின் கைபேசி எண்கள் விபரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன அவசர காவல் உதவி தேவைக்கு சம்பந்தப்பட்ட காவல் அலுவலர்களை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

News January 7, 2026

நெல்லை: இடம் வாங்க ரூ.5 லட்சம் பெறலாம் – APPLY!

image

நெல்லை மக்களே, நிலம் இல்லாத பெண்களுக்காவே நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் உள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.tahdco.com இணையதளத்தில் பார்க்கலாம் அல்லது நெல்லை மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். SHARE பண்ணுங்க

error: Content is protected !!