News April 29, 2025
ஆபீசுக்கு வாங்க. இல்லனா வேலைய விட்டு போங்க…

வீட்டிலிருந்து பணி செய்பவர்களை அலுவலகத்திற்கு வரச்சொல்லி கட்டாயப்படுத்த தொடங்கியிருக்கிறது கூகுள் நிறுவனம். கொரோனா நேரத்தில் தற்காப்புக்காக ஊழியர்களுக்கு Work From Home அளித்தன IT நிறுவனங்கள். ஆனால், கொரோனா ஓய்ந்த பின்னரும் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வர மறுப்பதால், Hybrid Model கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதன்படி, பணியாளர்கள் வாரத்திற்கு மூன்று முறையாவது அலுவலகத்திற்கு வர வேண்டும்.
Similar News
News November 25, 2025
நள்ளிரவில் பெண்கள் தனியாக செல்ல வேண்டாம்: பிரேமலதா

யாரையும் நம்பாமல், நள்ளிரவில் தனிமையான இடத்திற்கு செல்ல வேண்டாம் என்று பெண்களுக்கு பிரேமலதா அறிவுறுத்தியுள்ளார். அரசு, பெற்றோர், போலீஸ் என எல்லாரும் 24 மணிநேரமும் நம்மை பாதுகாக்க மாட்டார்கள் என்றும் கூறிய அவர், நாம் தான் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். கோவையில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், அங்கு பரப்புரை செய்கையில் இவ்வாறு பிரேமலதா பேசினார்.
News November 25, 2025
MRP-ஐ விட அதிக விலையா? இதை உடனே செய்யுங்கள்

பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட மக்கள் அவசரமாக பயணிக்கும் இடங்களில் MRP-ஐ விட அதிக விலையில் சிலர் பொருள்களை விற்பர். அவசர கதியில் நாமும் அதிக பணம் கொடுத்து வாங்கியிருப்போம். ஆனால், இனி இந்த தவறை செய்யாதீர்கள். எந்தவொரு இடத்திலும் MRP-ஐ விட அதிக விலைக்கு பொருள்களை விற்பனை செய்தால் ‘1915′ என்ற நுகர்வோர் ஹெல்ப்லைனுக்கு கால் செய்து புகாரளிக்கலாம். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.
News November 25, 2025
8 மாவட்டங்களில் மழை வெளுக்கும்

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், குமரி, ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, தேனி, நீலகிரி, கோவை ஆகிய 8 மாவட்டங்களில் காலை 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. இதனால் சில இடங்களில் தண்ணீர் தேங்க வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் ஜாக்கிரதையாக செல்ல வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.


