News April 29, 2025
அட்சய திருதியை நாளில் 5 பொருள்களை வாங்குங்கள்

அட்சய திருதியை நாளை (ஏப்.29) மாலை 5:31-க்கு தொடங்கி ஏப்.30-ம் தேதி பிற்பகல் 2:12-க்கு நிறைவடையும். இந்த நாளில் தானம் செய்வது, பொருள் வாங்குவது, வழிபாடு உள்ளிட்ட செயல்களை மேற்கொள்வது நற்பலன்கள் தரும் என்பது நம்பிக்கை. தங்கம் வாங்குவது மங்களகரமான தொடக்கமாக கருதப்பட்டாலும், நவதானியங்கள், மண்குடம், பித்தளை-செம்பு பாத்திரங்கள், மஞ்சள், புத்தகங்கள், உப்பு போன்றவற்றையும் வாங்கலாம் எனக் கூறப்படுகிறது.
Similar News
News November 19, 2025
மதிப்பு கூட்டும் மையங்கள்: 1.50 கோடி வரை மானியம்

100 மதிப்பு கூட்டும் மையங்கள் அமைத்திட தொழில் முனைவோர்களுக்கு ₹1.50 கோடி வரை மானியம் கிடைக்கும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இத்திட்டத்தில் பயன்பெற ஆர்வமுள்ள வேளாண் தொழில்முனைவோர்கள் விரிவான திட்ட அறிக்கை தயாரித்து , வங்கியில் கடன் ஒப்புதல் பெற்றபின், மாவட்ட நிர்வாகத்திடம் மானியம் பெறுவதற்காக விண்ணப்பிங்களாம் எனவும் தெரிவித்துள்ளார்.
News November 19, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (நவ.19) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News November 19, 2025
32,438 காலியிடங்கள்… RRB தேர்வு ஒத்திவைப்பு

நவ.17 முதல் டிசம்பர் கடைசி வாரம் வரை நடக்கவிருந்த குரூப்-D பணிகளுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக RRB அறிவித்துள்ளது. மேற்கண்ட தேர்வு வரும் 27-ம் தேதி முதல் ஜனவரி 16, 2026 வரை நடைபெறும். நாளை முதல் இதற்கான இடம், தேதி விவரங்களை இணையத்தில் அறியலாம். தேர்வுக்கு 4 நாள்கள் முன்பாக e-call letters-ஐ டவுன்லோடு செய்துகொள்ளலாம். மொத்தம் 32,438 காலியிடங்களை நிரப்ப இந்த தேர்வுகள் நடைபெறுகின்றன.


