News April 29, 2025
அட்சய திருதியை நாளில் 5 பொருள்களை வாங்குங்கள்

அட்சய திருதியை நாளை (ஏப்.29) மாலை 5:31-க்கு தொடங்கி ஏப்.30-ம் தேதி பிற்பகல் 2:12-க்கு நிறைவடையும். இந்த நாளில் தானம் செய்வது, பொருள் வாங்குவது, வழிபாடு உள்ளிட்ட செயல்களை மேற்கொள்வது நற்பலன்கள் தரும் என்பது நம்பிக்கை. தங்கம் வாங்குவது மங்களகரமான தொடக்கமாக கருதப்பட்டாலும், நவதானியங்கள், மண்குடம், பித்தளை-செம்பு பாத்திரங்கள், மஞ்சள், புத்தகங்கள், உப்பு போன்றவற்றையும் வாங்கலாம் எனக் கூறப்படுகிறது.
Similar News
News November 21, 2025
இன்று முதல் அமலுக்கு வந்தது… 4 புதிய தொழிலாளர் சட்டங்கள்

மத்திய அரசு உருவாக்கியுள்ள 4 தொழிலாளர் நலச் சட்டங்கள் இன்று அமலுக்கு வந்துள்ளன. தற்போதுள்ள பணிச்சூழல் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப, ஏற்கெனவே இருந்த 29 தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்களும் மாற்றங்களும் செய்யப்பட்டு ஊதியச் சட்டம்(2019), தொழில் உறவுகள் சட்டம்(2020), சமூக பாதுகாப்பு சட்டம்(2020), பணியிட பாதுகாப்பு, உடல்நலம் & பணிச்சூழல் சட்டம்(2020) ஆகிய நான்கு சட்ட தொகுப்புகளாக உருவாக்கப்பட்டுள்ளன.
News November 21, 2025
உதடு வெடிப்பை தடுக்க உதவும் வழிகள்

குளிர்காலத்தில் உதடு வெடிப்பு, நமக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும். அந்த நேரத்தில், சாப்பிடுவது கூட கஷ்டமாக இருக்கும். அதை எதிர்கொள்ள, எளிமையான வழிகள் உள்ளன. அவை என்னென்ன வழிகள் என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.
News November 21, 2025
இவர்களுக்கு ₹1,000 மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக இணைபவர்களின் லிஸ்ட் தயாராகி வருவதாக அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. தேர்வு செய்யப்படும் குடும்பத் தலைவிகளுக்கு, செல்போன் மூலம் டிசம்பர் முதல் வாரத்தில் குறுஞ்செய்தி அனுப்பப்படும். டிச.15-ல் அவர்களது வங்கிக் கணக்கில் ₹1,000 வரவு வைக்கப்படும். குறுஞ்செய்தி வராதவர்களுக்கு பணம் கிடைக்காது. அரசு அடுத்த அறிவிப்பு வெளியிடும் வரை காத்திருக்க வேண்டும்.


