News April 6, 2025
வணிகம், சுற்றுலா அதிகரிக்கும்: பிரதமர் நம்பிக்கை!

பாம்பனில் கட்டப்பட்ட புதிய ரயில் பாலத்தால் வணிகம், சுற்றுலா அதிகரிக்கும். வேலைவாய்ப்பும் பெருகும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். சரக்கு போக்குவரத்துக்கும் வழித்தடம் அமைக்கப்பட்டு வருவதாக கூறிய பிரதமர், கடந்த 10 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் நாடு இரட்டிப்பு வளர்ச்சியை பெற்றுள்ளதாகவும், இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன எனவும் பேசினார்.
Similar News
News April 7, 2025
அதிமுகவில் அண்ணன், தம்பி போல் இருக்கிறோம்

அதிமுகவில் எந்த விரிசலும் இல்லை; அண்ணன், தம்பி போல உள்ளோம் என்றும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்ததால், செங்கோட்டையன் மட்டும் அவையில் இருந்தார் எனவும் EX மினிஸ்டர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். நிர்மலா உடனான சந்திப்பு குறித்த கேள்விக்கு, நான் கூடத்தான் நட்டாவை சந்தித்தேன்; தொகுதி பிரச்னை தொடர்பாக மத்திய அமைச்சர்களை MLAக்கள் சந்திப்பது ஒன்றும் புதிதல்ல என்றும் நாசூக்காக பதிலளித்தார்.
News April 7, 2025
ஒரே நாளில் ₹85,854 கோடியை இழந்த பணக்காரர்கள்

இன்று உலகளவில் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியடைந்ததால், இந்தியாவின் 4 பெரும் பணக்காரர்கள் ₹85,854 கோடியை இழந்துள்ளனர். அதிகபட்சமாக அம்பானி ₹30,906 கோடியை இழந்துள்ளார். இந்த பட்டியலில் 2ஆம் இடத்தில் உள்ள அதானி ₹25,757 கோடியை இழந்துள்ளார். OP Jindal குழுமத்தின் சாவித்ரி ஜிண்டால் மற்றும் குடும்பத்தினர் ₹18,888 கோடியையும், HCL Technologies நிறுவனர் ஷிவ் நாடார், ₹12,878 கோடியையும் இழந்துள்ளனர்.
News April 7, 2025
23 பேரால் கேங்க் ரேப்… ஒரு வாரமாக சிறுமிக்கு கொடுமை!

உ.பி.யில் 23 மனித மிருகங்களால் ஒரு சிறுமி வேட்டையாடப்பட்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 12-ம் வகுப்பு பயிலும் மாணவி, தனது நண்பருடன் பாருக்கு சென்றுள்ளார். அங்கு அவரது நண்பர்கள் குளிர்பானத்தில் போதை மருந்து கொடுத்து, சிறுமியை ஒரு வாரமாக ரேப் செய்துள்ளனர். 23 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அதில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது.