News October 16, 2025
Business Roundup: நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதி அதிகரிப்பு

*இந்த வாரத்தின் முதல் 2 நாள்கள் வீழ்ச்சியடைந்த பங்குச்சந்தைகள், நேற்று ஏற்றம் கண்டன. *அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு நேற்று 74 காசுகள் உயர்ந்து ₹88.06 ஆனது. *நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி ₹3.20 லட்சம் கோடி, இறக்குமதி ₹6.03 லட்சம் கோடியாகவும் அதிகரித்துள்ளது. *மாதம் 12 லட்சம் ஜோடி சாக்ஸ் திருப்பூரில் இருந்து ஏற்றுமதி. *சென்னையில் வீடு விற்பனை 2 மடங்காக உயர்வு.
Similar News
News October 16, 2025
கோலி, ரோஹித் ஓய்வு எப்போது? ரவி சாஸ்திரி

டெஸ்ட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது போல, அவர்களே (ரோஹித், கோலி) ODI குறித்தும் முடிவு செய்வார்கள் என ரவி சாஸ்திரி கூறியுள்ளார். ரோஹித் சர்மா, விராட் இருவரும் ஆஸி.,க்கு எதிரான ODI தொடரோடு ஓய்வை அறிவிப்பர் என தகவல் வெளியாகும் நிலையில், ரவி சாஸ்திரி பேசியது பேசுபொருளாகியுள்ளது. இருவருக்கும் ODI-க்கு போதுமான உடற்தகுதி உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ரோஹித் – கோலி ஆட்டத்தை பார்க்க ரெடியா?
News October 16, 2025
BREAKING: பிரபல தமிழ் நடிகர்கள் வீடுகளில் பதற்றம்

நடிகர்கள் கார்த்திக், சத்யராஜ், நாசர், அமீர் ஆகியோரின் வீடுகளுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். டிஜிபி அலுவலகத்திற்கு வந்த இமெயிலை தொடர்ந்து, அனைவரின் வீடுகளிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதால், பதற்றமான சூழல் நிலவி வருகிறது. கடந்த சில நாள்களாகவே, அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்களின் வீடுகளுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
News October 16, 2025
BREAKING: இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறையா?

கனமழை எதிரொலியாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மழை நிலவரத்திற்கேற்ப ராமநாதபுரத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விட தலைமை ஆசிரியர்களே முடிவெடுக்கலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்படுள்ளது குறிப்பிடத்தக்கது.