News April 16, 2024

பேருந்து கவிழ்ந்து விபத்து; 5 பேர் பலி

image

ஒடிசா அருகே சுற்றுலா பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகி ஐவரை பலி வாங்கியிருக்கிறது. கட்டாக் நகரிலிருந்து மேற்குவங்கம் நோக்கி சென்ற தனியார் சொகுசு பேருந்து, பராபதி என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் இருந்து கீழே விழுந்து விபத்திற்குள்ளானது. இதில் பயணிகள் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 38க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Similar News

News November 23, 2025

மஞ்சள் கலந்து நீர் குடிப்பதால் இத்தனை நன்மைகளா?

image

*மஞ்சள் நீர் குடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
*அஜீரணம், நெஞ்செரிச்சல், வாயு போன்ற செரிமான பிரச்சனைகளுக்கு மஞ்சள் கலந்த வெந்நீர் குடிப்பது நல்லது என கூறுகின்றனர். *கெட்ட கொழுப்பைக் குறைக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இது நல்லதாம். *ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தவும் இந்த நீர் உதவுவதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

News November 23, 2025

NATIONAL 360°: துப்பாக்கி வெடித்து காவலர் பலி

image

*ஹரியானாவில் 18 வயது பூர்த்தியாகாத நபர் ஓட்டிய கார் மோதியதில் 8 வயது சிறுவன் பலியான சோகம். *குஜராத்தில் 2-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு, பள்ளி வளாகத்தில் பாலியல் வன்கொடுமை செய்த நபரை தேடி வரும் போலீசார். *ஜார்க்கண்டில் தனது துப்பாக்கியை சுத்தம் செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக வெடித்ததில் காவலர் பலி. *மகாராஷ்டிரா DCM அஜித் பவாரின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் 4 பேர் காயம்.

News November 23, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: சுற்றந்தழால் ▶குறள் எண்: 527
▶குறள்:
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்.
▶பொருள்: அனைத்து மக்களும் சமம் எனினும், அவரவர்க்குரிய ஆற்றலுக்கேற்ப அவர்களைப் பயன்படுத்திக் கொண்டால், அந்த அரசை அனைவரும் அரணாகச் சூழ்ந்து நிற்பர்.

error: Content is protected !!