News April 16, 2024
பேருந்து கவிழ்ந்து விபத்து; 5 பேர் பலி

ஒடிசா அருகே சுற்றுலா பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகி ஐவரை பலி வாங்கியிருக்கிறது. கட்டாக் நகரிலிருந்து மேற்குவங்கம் நோக்கி சென்ற தனியார் சொகுசு பேருந்து, பராபதி என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் இருந்து கீழே விழுந்து விபத்திற்குள்ளானது. இதில் பயணிகள் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 38க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News April 29, 2025
9 செவ்வாய்கிழமைகளில் முருகனை வழிபட்டால்….

9 செவ்வாய்கிழமைகளில் விரதமிருந்து முருகனை வழிபடுவது, வாழ்வில் செல்வத்தை பெருக்கி, செவ்வாய் தோஷம் பாதிப்புகளை குறைக்கும் என்பது நம்பிக்கை. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் காலையில் நீராடி, முருக பெருமானை வழிபடுங்கள். மாலை வரை பால், பழச்சாறு மட்டுமே அருந்தி விரதமிருந்து முருகனின் பெயரை உச்சரியுங்கள். மாலையில், பிரசாதம் செய்து, நெய்வேத்தியம் படைத்து முருகனை வழிபட்டு விரதத்தை முடியுங்கள்.
News April 29, 2025
பப்ளிசிட்டி இல்லாமல் உதவும் அஜித்.. ஜனாதிபதி புகழாரம்

பத்ம பூஷன் விருது பெற்ற நடிகர் அஜித் குமாருக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு பாராட்டு தெரிவித்துள்ளார். அவரது X தளத்தில், தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் அஜித், பல்துறை நடிகர்களில் ஒருவராக திகழ்வதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், சினிமாவைத் தாண்டி பப்ளிசிட்டி இல்லாமல் பல தொண்டு செயல்களை அஜித் செய்து வருவதாகவும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
News April 29, 2025
விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு: அரசு புதிய ஆணை

சூரிய சக்தி பம்ப் செட் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு தரக்கூடாது என்ற உத்தரவை TN மின்சாரத் துறை திரும்பப் பெற்றுள்ளது. ஏப்.8-ல் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், சூரிய சக்தி பம்ப் செட் வைத்திருப்பவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதற்கு விவசாயிகள் இடையே எதிர்ப்புகள் கிளம்பின. இதனையடுத்து, அந்த சுற்றறிக்கையை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.