News April 16, 2024

பேருந்து கவிழ்ந்து விபத்து; 5 பேர் பலி

image

ஒடிசா அருகே சுற்றுலா பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகி ஐவரை பலி வாங்கியிருக்கிறது. கட்டாக் நகரிலிருந்து மேற்குவங்கம் நோக்கி சென்ற தனியார் சொகுசு பேருந்து, பராபதி என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் இருந்து கீழே விழுந்து விபத்திற்குள்ளானது. இதில் பயணிகள் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 38க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Similar News

News November 24, 2025

சாவு எப்படி வந்தது பாருங்க.. அதிர்ச்சி

image

சாவு எப்படி வரும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. மதுரையில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர் விஷ்ணுவர்தன்(26) திடீரென உயிரிழந்ததே அதற்கு உதாரணம். தண்ணீர் தாகம் எடுத்த நிலையில், அங்கேயே அவர் மயங்கி விழுந்துள்ளார். உடனே சக நண்பர்கள், விஷ்ணுவர்தனை ஹாஸ்பிடலுக்கு தூக்கிச் சென்றுள்ளனர். ஆனால், மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இளைஞர்களே உடலை பராமரியுங்கள்!

News November 24, 2025

மகளிர் கபடி அணிக்கு PM மோடி வாழ்த்து

image

மகளிர் உலகக் கோப்பை கபடியில் சாம்பியன் பட்டம் வென்ற <<18376835>>இந்திய அணியை<<>> PM மோடி வாழ்த்தியுள்ளார். இந்த வெற்றியால் ஒட்டுமொத்த நாடும் பெருமை கொள்வதாக அவர் X-ல் பதிவிட்டுள்ளார். மகளிர் அணியின் வெற்றியானது, எண்ணற்ற இளைஞர்களை கபடியில் ஈடுபடவும், பெரிய அளவில் கனவு காண்பதற்கு ஊக்குவிக்கும் என்றும் PM மோடி கூறியுள்ளார். தொடர் முழுக்க இந்திய வீராங்கனைகள் அபாரமாக செயல்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News November 24, 2025

பவாரியா கொள்ளையர்கள் வழக்கு கடந்து வந்த பாதை (1/2)

image

கும்மிடிப்பூண்டி MLA-வாக இருந்த சுதர்சனத்தின் வீட்டில் 2005 ஜன.9 அன்று நள்ளிரவில் புகுந்த பவாரியா கும்பல், அவரை கொலை செய்துவிட்டு 65 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றது. இதையடுத்து இந்த கும்பலைச் சுட்டுப்பிடிக்க அப்போதைய CM ஜெயலலிதா ஐஜி ஜாங்கிட் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைத்தார். அவர்கள் ஹரியானாவை சேர்ந்த ஓம் பிரகாஷ், ஜெகதீஷ், ராகேஷ், அசோக், 3 பெண்கள் உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர்.

error: Content is protected !!